Thursday, September 27, 2018

முதலமைச்சரும் ஐங்கரநேசனும் என்னை களவுக்கு நிர்பந்தித்தனர். பயத்திலேயே கைப்பொமிட்டாராம் செயலாளர்.

பளை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு காற்றாலை நிறுவனங்களுக்கு சட்டத்திற்கு விரோதமாக அனுமதிவழங்கி, முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து வட மாகாண சபையில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. விக்கி ஊழலில் நேரடியாக தொடர்பு பட்டிருக்கின்றார் என்பதற்கு ஆதாரமான பல்வேறு ஆவணங்கள் அச்சபையில் சமர்பிக்கப்பட்டு வருகின்றநிலையில் „முன்னாள் நீதியரசர்' சபை விவாதங்களில் கலந்து கொள்ளாமல் ஒழிந்தோடி வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இந்நிலையில் இன்று சபை கூடியபோதும் „முன்னாள் நீதியரசர்' சபை அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் அவைத்தலைவருக்கு „முன்னாள் நீதியரசர்' அனுப்பி வைத்த மின்னஞ்சலில் மிக முக்கிய விடயம் ஒன்றுக்கு சமூகமளிக்கவேண்டியுள்ளதாவும் , தாமதமாகி சபைக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனாலும் „முன்னாள் நீதியரசர்' இன்று இரண்டு மணிக்கு சபை முடியும்வரை அந்தப்பதக்கம் தலைகாட்டவே இல்லை.

வடமாகாண சபையின் அமைச்சரவையை செயலிழக்க செய்ததனூடாக வட மாகாண நிர்வாகத்தையே முடக்கியுள்ள விக்னேஸ்வரனுக்கு, சபையை புறக்கணித்து கலந்து கொள்ளவேண்டிய முக்கிய நிகழ்வு யாதென தேடியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

யாழ் பல்கலைக்கழகத்தில் நான்காவது முறையாக (27.09.2018) நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில், ஆராய்ச்சிகள் தொடர்பான நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நூல்வெளியீட்டு நிகழ்வே „முன்னாள் நீதியரசருக்கு' மாகாண சபை அமர்வுகளிலும் பார்க்க முன்னுருமை வழங்கப்பவேண்டியதாக இருந்துள்ளது என சபை உறுப்பினர்கள் விசனம் கொள்கின்றனர். கடந்த அமர்வினை தவிர்த்து திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த „முன்னாள் நீதியரசர்' , „திருமணம் வாழ்வில் ஒரு நாளே என்றும் சபை அமர்வுகள் தொடர்ந்து வரும்' என்று தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

வட மாகாண சபையை புறக்கணித்து மத்திய அரசின் கல்வி அமைச்சரை வால்பிடிக்கும் காட்சி

இந்நிலையில் மோசடி இடம்பெற்றுள்ள காற்றாலை விடயம்பற்றி பேசப்பட்டபோது, காணிகள் ஆணையாளர் திணைக்களத்தினால் காணிக்கான அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னரே, முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளரால் காணிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அது மோசடியான செயல் என்றும் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேண்டுதல் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் சபைக்கு கடிதம் ஒன்றினூடாக விளக்கமளித்துள்ளார் செயலாளர். அக்கடிதத்தில் „தன்னை முதலமைச்சரும் ஐங்கரநேசனும் நிர்பந்தித்தாகவும், பயத்தின் நிமிர்த்தம் தான் அவ்வாறு கையொப்பம் இட்டதாகவும் தெரிவித்துள்ள பந்தியை சபையில் வாசித்துக்காட்டினார் எதிர்கட்சி தலைவர் தவராசா.

அரச நிறுவனங்களுக்கு வழங்கவேண்டிய சீமெந்தை தனியாருக்கு விற்பனை செய்து ஐங்கரநேரசன் ஒருகோடிக்கு மேற்பட்ட தொகை மோசடி செய்துள்ளமை தொடர்பில் பொறுமை காக்க முடியாது, சிறந்த அதிகாரி ஒருவரின் தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சபை ஊழல் சபையாகவே இனம்காணப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை என்று காலைத்தை கடத்த முடியாது விடயத்தை நிதிமோசடிப்பிரிவுக்கு பாரப்படுத்துங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தார் சிவாஜிலிங்கம்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com