Wednesday, September 26, 2018

அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்கள்

அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அனுமதிப்படி அந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல கூறினார்.

அரசியலமைப்பு பேரவையின் ஐந்து உறுப்பினர்களது உத்தியோகபூர்வ காலம் அண்மையில் நிறைவடைந்தது.

திலக் மராபான, விஜித ஹேரத், டபிள்யு.டி.ஜே. செனிவிரத்ன மற்றும் சிவில் பிரதிநிதிகள் இருவரது காலம் அண்மையில் நிறைவடைந்ததுடன், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் அதன் உத்தியோகபூர்வ உறுப்பினர்கள்.

புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் போது, ஏற்கனவே இருந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல மேலும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com