Wednesday, September 26, 2018

தற்போதைய அரசாங்கம் பழிவாங்குவதை வேற வேறொன்றும் செய்யவில்லை. மகிந்தர்

தற்போதை அரசாங்கம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்துவது தொடர்பில் கருத்திற் கொள்ளாமல் அரசியல் பழிவாங்கள்களில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தானும் தன்னுடைய குழுவினரும் இன்னமும் நாட்டின் நீதிக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பம் தொடர்பில் நியாயமான முறையில் விசாரணை இடம்பெறும் என்று நம்புவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நேற்று (25) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தன்னுடன் பணியாற்றிய மிகவும் திறமையான அதிகாரிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சேவையாற்றுவதாகவும், அவர்கள் அதேபோன்றே தற்போதும் இருந்தால் சரியான முறையில் விசாரணை செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களின் எதிர்பார்ப்பு தான் அல்ல என்றும், அவர்களின் எதிர்பார்ப்பு மஹிந்த ராஜபக்ஷவே என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com