Tuesday, September 25, 2018

நீங்கள் ஒன்றும் பாதிக்கப்படவில்லை. இடத்தை காலி செய்யுங்கள். சைக்கிள் கொம்பனியை விரட்டிய நீதிபதி.

உண்ணா விரதமிருந்து இறந்த திலீபன் சார்பாக நிகழ்த்தப்படும் நிகழ்வுகள் , நினைவுத்தூபி மற்றும் சுற்று வேலி போன்றவற்றுக்கு தடையுத்தரவிடக்கோரி பொலிஸார் தரப்பில் யாழ் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொலிஸாரின் விண்ணப்பத்தை எதிர்த்து சுமத்திரன் மன்றில் ஆஜராகியிருந்ததுடன் குறித்த செய்பாட்டுக்காக அரசு நிதியொதுக்கியுள்ளதாகவும் மாநகர சபையை இவ்விடயத்திற்காக குற்றஞ்சுமத்த முடியாது என்றும் வாதிட்டிருந்தார்.

திலீபனின் நினைவிடத்தை புனரமைப்பது சட்டவிரோதமானதல்ல, பொலிசார் கேட்டுக் கொண்டதன்படி நினைவேந்தலை தடை செய்ய முடியாது, நாளை நினைவேந்தலை நடத்துவதில் எந்ததடையுமில்லையென நீதிமன்று அறிவித்துள்ளது.

இதேநேரம், மன்றில் பிரசன்னமாகிய சைக்கிள் கொம்பனியைச் சேர்ந்த மணிவண்ணன் தலைமையிலான சட்டத்தரணிகள் நால்வர் விவாதத்தில் கலந்து கொள்ள முற்பட்டபோது, நீங்கள் யார் சார்பாக ஆஜராகின்றீர்கள் என நீதிபதி வினவியபோது, நாம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக என பதிலளித்துள்ளனர். அவர்களின் பதிலை ஏற்றுக்கொள்ளாக நீதிபதி இங்கு ஒருவரும் இவ்விடயத்தில் பாதிக்கப்படவில்லை தங்கள் பிரசன்னம் அவசியமற்றது என நிராகரித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com