Tuesday, September 18, 2018

ஜனாதிபதி வேட்பாளராக தன்னுடைய பெயரும் பேசப்படுகின்றதாம். வாசு.

ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பில், பொதுஜன பெரமுன தீர்மானமொன்றை மேற்கொள்ள​வெண்டுமென குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, தனது பெயரும் முன்மொழியப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒன்றிணைந்த எதிரணியினர் பொதுவாக எடுக்கும் தீர்மானங்களுக்கு தாம் உடன்படுவதாகவும், வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

குடும்ப ஆட்சி நாட்டுக்கு பொருத்தமற்றதென, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர் ​போட்டியிடுவாரென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்த கருத்து குறித்தே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால் தான், கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார் என, குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com