Tuesday, September 18, 2018

மேற்குலகில் அரசியல் தஞ்சம் பெற்றுக்கொள்ள இதோ வழி.

தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாடுகளில் பல்வேறு வகையினர் அரசியல் தஞ்சம் கோரினர். அவ்வாறு கோரியவர்களில் பெரும்பாலானோர் சுகபோக வாழ்வு தேடிச் சென்றவர்கள் என்பதும் அவர்கட்கும் நாட்டில் நடைபெற்ற யுத்தத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதும் பரவலாக பேசப்படுகின்ற விடயம்.

இன்றும் இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையிலும் நாட்டை விட்டு வெளியேறவே பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகின்றனர். அவ்வாறு செல்கின்றவர்களில் பெரும்பாலானோர் செல்வந்த வீட்டுப்பிள்ளைகள். உண்மையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் இங்கே ஒருநேர உணவுக்காக கூலித்தொழில் செய்துவருகின்றனர். அவர்கள் அரசியல் தஞ்சம் பெற்றுக்கொள்வதற்காக புதியதோர் வழியொன்றை கண்டு பிடித்துள்ளமை அண்மையில் சாவகச்சேரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கைது ஒன்றின்போது தெரியவந்துள்ளது.

6 மாதங்களாக வாள் வெட்டுக்குழுவில் அங்கம் வகிக்கும் நபர் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் தேடி வந்த நிலையில் சாவகச்சேரி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடிப்படையாக வைத்து மானிப்பாய் பொலிஸார் வேன் ஒன்றில் சாவகச்சேரி பகுதிக்கு சென்ற போது அங்கு குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக முன்னாயத்தங்களை செய்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் வைத்திருந்த தொலைபேசிக்கு வந்த அழைப்பை வைத்து ஏனைய வாள் வெட்டு சந்தேகநபர்களை பிடிப்பதற்காக அவர்களிடம், உங்கள் சகா வாகன விபத்தில் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சகாவை வையத்தியசாலையில் பார்க்கச்சென்றவர்களை அங்குவைத்து கைது செய்த பொலிஸார், இதே பாணியில் ஏனைய 7 வாள் வெட்டு குழு சந்தேக நபர்ளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மாம்பழம் எனும் சந்தேக நபரின் வீட்டில் இருந்து 3 வாள் மற்றும் கைக்கோடாலியும் கைபற்றப்பட்டது.

இதில் கைதான இருவர் உயர்தர பரிட்சையில் இவ்வருடம் தோற்றுபவர்களாவர்.

மேற்படி நபர்களிடம் மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மாம்பழம் என்பவருக்கு வெஸ்டன் யூனியன் மூலமாக பெருந்தொகையான பணம் வெளிநாடு ஒன்றிலிருந்து மாதாந்தம் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பணத்தில் தமது உறுப்பினர்களுக்கு மாதாந்தும் மது மாதுவுடன் விருந்துபசாரம் வழங்கப்பட்டு வந்தமையும் தெரியவந்துள்ளது. குறிந்த விருந்துபசாரத்தின் நோக்கம் பற்றி வினவப்பட்டபோது இளைஞர்களை தம்முடன் இணைத்துக்கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வகுத்துக்கொடுக்கப்பட்ட வியூகம் எனத் தெரிவித்துள்ளார் மாம்பளம்.

இவ்வாறு இளைஞர்களை இணைந்து வன்செயல் புரிந்து, குடாநாட்டில் ஓர் அச்சநிலை உள்ளதாக உலகிற்கு காட்டுவதே புலம்பெயர் தமிழரின் தேவை என்றும் அதனடிப்படையில் தான் செயற்பட்டுவந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் அரசியல தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடுகடத்தலை எதிர்நோக்கி நிற்கும் நபர்களின் வீடுகளை தாங்கள் உடைத்துள்ளதாகவும், வீட்டிலுள்ளோரை அடித்தது காயப்படுத்துதல், தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தல் போன்றவற்றை தாம் செய்து வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதற்கான அறிவுறுத்தல் தமக்கு குறித்த நாடுகளிலுள்ள தமது இயக்குனர்களிடமிருந்து கிடைத்துவந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் இவ்வாறு செயகின்றபோது அங்குள்ளவர்கள் இலங்கையிலே இராணுவத்தினரின் பாதுகாப்பு கெடுபிடி தங்கள் பிரதேசத்தில் இருப்பதாக காட்டி தமக்கான வெளிநாட்டு தஞ்சக்கோரிக்கையை உறுதிபடுத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் குறித்த காடையர்கள் கைது செய்யப்படும்போது, அவர்களை விடுவிக்கவென பொலிஸ்நிலையத்தில் ஆஜராகி பொலிஸாருடன் முரண்படும் இழிசெயலை வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் செய்துவருகின்றார் என மக்கள் ஆத்திரம் கொண்டுள்ளனர்.

அத்துடன் மக்களால் நன்கு அறியப்பட்ட குறித்த சமூக விரோதிகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான சயந்தன் தொடர்ந்தும் அவர்களை விடுதலை வீரர்கள் என காண்பிக்க முற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கைது செய்யப்படுகின்ற காடையர்களின் உறவினர்கள் சிலர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர் என்பது நகைப்புக்குரியதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com