Friday, August 31, 2018

இன்றைய நல்லாட்சி அரசின் நல்ல இலட்சனம் இதுதானா? -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

இலங்கையில் சீரற்ற காலநிலைகளின் போது வெள்ளப் பெருக்கால் மிகப் பாதிக்கப்படும் ஒரு பிரதேசமாக அடையாளப்படுத்தப்படும் மாவட்டங்களில் ஒன்றுதான் இரத்தினபுரி. இந்த மாவட்டத்தில் ஏற்படக் கூடிய வெள்ளப் பெருக்கு கொழும்பின் களனி கங்கைக் கரையோரம் வரை பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் இரத்தினபுரியின் வெள்ள நிலைமை எவ்வாறிருக்கும் என்பதனை நாங்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால், வசதி குறைந்த ஒரு தனி நபர் சாதாரணமாகப் பாதிக்கப்பட்டாலும் அவர் இழக்கும் சொத்துகளின் ஆகக் குறைந்த பெறுமதி அண்ணளவாக 20, 000 ரூபாவாக இருக்கும். அதனை விட நிச்சயமாகக் குறைவான சேதம் அவருக்கு ஏற்படாது.

கடந்த வருடம் இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் அந்தப் பிரதேசத்தில் பாரிய அழிவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. இதனை நாம் மறந்து விட முடியாது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நஷ்டயீடுகளை வழங்கியது. தொடர்ந்தும் வழங்கி வருகிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அண்மையில் அரசாங்கத்தால் நஷ்டயீடு வழங்கப்பட்டுள்ளது. அவர் பெற்ற நஷ்டயீட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 80 ரூபாதான்.

கடந்த வருடம் இரத்தினபுரியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்குக் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட எஸ். சந்திமா ரஸஞ்ஜலி என்ற பெண், வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட தனக்கு நஷ்டயீடாக
80 ரூபாவை அரசாங்கம் வழங்கியமை தொடர்பில் தனது வேதனையை வெளியிட்டுள்ளார்.

வெள்ள அனர்த்தத்தில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் கணிப்பீடு வெறும் 80 ரூபா அல்ல என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டு அவர் இரத்தினபுரி பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மூலம் பல பில்லியன்கள் பணம் மோசடி செய்யப்பட்டு மக்கள் பணம் வீணடிக்கப்பட்டமை உட்பட பல மோசடிகளில் சிக்கியுள்ள இந்த அரசாங்கம், பாரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு வழங்கிய நஷ்டயீடு வெறும் 80 ரூபாதான்.

பார்வையிழந்த ஓர் அரச அதிகாரியாவது பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை நேரில் சென்று அந்தப் பெண்ணின் சேதமடைந்த உடைமைகளைத் தொட்டு உணர்ந்து அவற்றின் சேதத்தை அறிக்கையிட்டாலும் நிச்சயம் 80 ரூபாவாக இருக்க முடியாது

அலரிமாளிகையை அரசியல்வாதிகளின் திருமண மண்டபமாக மாற்றியுள்ள இந்த அரசாங்கம், அப்பாவி மக்களின் குடிசை வாழ்க்கையை அவல வாழக்கையாக மாற்ற முய்சிப்பது வேதனைக்குரியது.



(நன்றி படம் நெத் எப்.எம். சிங்களம்)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com