Friday, August 31, 2018

5 மாத கர்பிணியை கொன்றது புலிகளின் முன்னால் காவல்துறை உறுப்பினன்.

நேற்று முன்தினம் கிளிநொச்சி பன்னங்கட்டி பகுதியில் இளம் தாய் ஒருத்தி கொலை செய்யப்பட்டிருந்தாள். கணவனால் கைவிடப்பட்டிருந்த அத்தாய் தனது ஊனமுற்ற குழந்தை ஒன்றை வழர்ப்பதற்காக தொழிற்சாலை ஒன்றில் காவல்காரியாக தொழில்புரிந்து வந்த நிலையிலேயே இக்கொலை நடைபெற்றுள்ளது.

கொலைஞன் இனம்காணப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் சகல ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தாலும் அவன் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினன் என்பதை இருட்டிப்பு செய்துவருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த குறித்த கொலையின் முழுமையான மர்மமும் இன்று துலங்கியது. நித்தியகலாவின் வயிற்றில் வளர்ந்த குழந்தை தன்னுடையதுதான் என்பதையும், அந்த குழந்தை விவகாரத்தால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்பதையும் கைதுசெய்யப்பட்ட முன்னாள் புலி காவல்துறையினன் ஏற்றுக்கொண்டுள்ளான்.

கொலையுண்ட பெண்ணின் தொலைபேசித் தரவுகளை பரிசீலனை செய்த பொழுது, குறித்த நிறுவனத்தில் பாதுகாப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்த முன்னாள் புலி காவல்துறையினனின்; தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன், கொல்லப்பட்ட பெண்ணும் அவரும் நீண்டகாலமாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளமை கண்டறியப்பட்டது. இதனடிப்படையில், இன்று மதியம் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரான கிருஸ்ணகீதன் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலிகளின் காவல்துறையினனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, கொலையை தானே செய்ததாக அவன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவன் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாவான். அவனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது-

கொல்லப்பட்ட பெண்ணுடன் எனக்கு தொடர்பு இருந்தது. அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை என்னுடையதுதான். அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள். எனக்கு குடும்பம் இருந்தது. அதனால் நித்தியகலாவை கூட்டிச்செல்ல முடியவில்லை. இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்தோம். 28.08.2017 அன்று அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும், நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டேன்.

பின்னர் அம்பாள்குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து, பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவ இடத்திற்கு சென்றோம். வரும்போதே நித்தியகலாவை மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள். அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்குள் சிறு பிரச்சனை வந்துவிட்டது. நித்தியகலா பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடையில் வந்தமையால் அவரது கழுத்து பட்டியில் தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.

இறந்தவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணப்படக் கூடாது என்பதற்காக நித்தியகலாவின் பாவாடை, மேற்சட்டை என்பவற்றை கழற்றி எடுத்துவிட்டு, சடலத்தை அருகில் இருந்த வயல்வெளிக்குள்ளால் இழுத்து சென்று, வாய்க்காலுக்குள் போட்டேன்.

மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்து கனகபுரம் பகுதியில் அவரின் பாவாடையை எறிந்துவிட்டு, கைப்பை மற்றும் மேற்சட்டை என்பவற்றை அம்பாள்குளப்பகுதியில் எறிந்தேன். மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு நேரம் வீட்டுக்கு வந்தேன். பின்பக்காக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கிள் கெல்மட்டை ஒழித்து வைத்து விட்டு மருந்துப் போத்தலை எடுத்து குடிக்க நினைத்தேன். பிறகு பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனையும் வீடுக்குள் ஒளித்துவைத்து விட்டேன். சம்பவ இடத்தில் இடுப்புபட்டி மற்றும் சில தடயங்களை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றை நானே கொண்டு வந்தேன். இக் கொலையை நான் மட்டுமே செய்தேன். என்னால் சம்பவ இடம், மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் அடையாளம் காட்ட முடியும்' என வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தான்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், பொருட்கள் வீசப்பட்ட இடத்திற்கு அவரை பொலிசார் அழைத்து சென்றனர். கனகபுரத்தில் வீசப்பட்ட பாவாடை மீட்கப்பட்டது. பின்னர், அவரது வீட்டுக் சென்று மோட்டார் சைக்கில் அவர் பாவித்த தொலைபேசி, ஹெல்மட், மற்றும் மருந்துப் போத்தல் என்பவற்றை மீட்டனர்.

அம்பாள் ளம் பகுதியில் வீசப்பட்ட மேற்சட்டையை சம்பவம் நடைபெற்ற மறுநாளே பொலிசார் மீட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் சந்தேகநபரின் மனைவியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தற்போது சந்தேகநபர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளான்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com