Wednesday, August 22, 2018

விக்னேஸ்வரனை தொடர்ந்தும் பொறுத்துக்கொள்ள மாட்டாராம் மாவை! பிரித்தானிய தூதரக அதிகாரியிடம் முறைப்பாடு!

யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த பிரித்­தா­னிய உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்தின் அர­சியல் தலைமை அதி­காரி நீல் கவானாக் சந்தித்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனா­தி­ராஜா, வடக்கு மாகாண சபை உரு­வாக்­கப்­பட்டு ஐந்து ஆண்­டுகள் ஆகின்­றன. எனினும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூறப்­பட்ட பல விட­யங்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. கூட்­ட­மைப்பு மாகாண சபையில் ஆளுங்­கட்­சி­யாக உள்­ள­போதும் அது செய­லற்­ற­தா­கத்தான் காணப்­ப­டு­கின்­றது. தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றுகின்றதோர் கூடமாகவே வடமாகாண சபை காணப்படுகின்றது. மக்­க­ளுக்­கான சேவை­யினை செய்­ய­வில்லை. அர­சியல் தீர்வு மற்றும் போரினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு அடிப்­ப­டைத்­தே­வை­களை அடை­யாளம் காணுதல், வேலை­வாய்ப்­புக்­களை உரு­வாக்­குதல், வாழ்­வா­தார உதவித் திட்­டங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­துதல் போன்ற விட­யங்­களில் மாகாண சபை முறை­யாக செயற்­ப­ட­வில்லை என முறையிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தூதரக அதிகாரி வினவியபோது, தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பும் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக நிறை­வேற்­ற­வில்லை என்றும் அதன் காரணமாக தாம் பலத்த விமர்சனத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர் தம்மை விமர்சிப்பவர்கள் தங்களுக்கு மாற்றுவழி ஏது என்பதை தெளி­வாகக் குறிப்­பி­டா­த­வர்­க­ளாக உள்­ளார்கள் என சிறுபிள்ளைத்தனமாக கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. மாற்றுவழி தெரியாத தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதற்கு அரியாசனம் என்ற கேள்வியை நிட்சயமாக தூதரக அதிகாரி கேட்டிருக்கலாம் என மக்கள் நம்புகின்றனர்.

மாகாண சபை­யினால் எதிர்­பார்க்கப்­பட்ட விட­யங்கள் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது அனை­வ­ருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ள மாவை சேனாதி ராஜா, அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கும் அழிந்த தேசத்­தினைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும். மக்­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கும் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்­டி­யி­டுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மக்கள் மத்­தியில் விமர்­ச­னங்கள் இருந்­தாலும் ஒரு சில விட­யங்கள் நடை­பெற்­றுள்­ளன. குறிப்­பாக அரசினால் விடுவிக்கப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீட்டுத் திட்­டங்கள் போன்­றவற்றை இம்முறை எமது அரசியல் மூலதனமாக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவிதுள்ளதாக அறியமுடிகின்றது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com