Thursday, August 23, 2018

ஐ.தே.க எம்பி யிடம் வேலை பெற்றுத்தருவதாக பணம் பெற்று ஏமாற்றியதாக முன்னாள் புலி கைது.

நடராஜா குகராஜா என்பவன் கடற்புலிகள் பிரிவில் இயங்கியவன். இலங்கை அரசிடம் சரணடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ச அரசின் எடுபிடிகளாக மாறிய பல நூற்றுக்கணக்கான புலிகளில் இவனும் ஒருவன். அக்காலகட்டதில் யாழ் கட்டளைத் தளபதியாகவிருந்த ஹத்துருசிங்கவினால் வழிநடத்தப்பட்ட இவன் டண் ரிவி யின் புகைப்படப்பிடிப்பாளராக இணைக்கப்பட்டான்.

ஊடவியலாளன் என்ற முகமூடி அணிந்திருந்த இவன் தொடர்பில் பல்வேறு சர்சைகள் காலம்காலமாக எழுந்திருந்தாலும், அவ்வப்போது தப்பித்துவந்துள்ளான்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலாவினூடாக வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குகன் என அழைக்கப்படுகின்ற குகராஜ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மல்லாகம் நீதிமன்ற உத்தரவின் பெயரில் 14 நாட்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளான். இவனுடன் விஜயகலா மகேஸ்வரனின் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இக்கப்பம் பெறுதல் தொடர்பில் விஜயகலாவிற்கு தொடர்புகள் உண்டா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முடக்கியுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேற்குறித்த இருவரும் இணைந்து பாதிக்கப்பட்ட நபருக்கு அரச திணைக்களமொன்றில் வேலை பெற்றுத்தருவதாக பெண் ஒருவரின் வங்கிக்கணக்கிற்கு ஐந்து லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளிலிருந்து ஊர்ஜிதமாகியுள்ளது.

மேலும் குகன் எனப்படுகின்ற குகராஜ் என்பவன் இதற்கு முன்னர் இளைஞர் ஒருவரை மேற்குலக நாடொன்றிற்கு அனுப்பி வைப்பதாக ஆறு இலட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டபோது, காவல்துறை உயர்மட்ட தொடர்புகளை பயன்படுத்தி அவன் கைதிலிருந்து தப்பித்துக்கொண்டதாக இணையத்தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com