Saturday, June 30, 2018

விக்னேஸ்வரன் தனது முதலமைச்சர் கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார்

இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த 'நீதியரசர் பேசுகிறார்' என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் "சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தன் தலைமை வகிக்கும் கட்சி எந்தக் கட்சி? தமிழரசுக் கட்சியில் அவருக்கு எந்த முக்கிய பதவியும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டணியில்தான் அவர் தலைவராக இருக்கிறார். ஆனால் ததேகூ பதவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல. அது ஒரு தேர்தல் கூட்டணி. கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு வேட்பாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிடுகிறார்கள்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமிழ் அரசுக் கட்சியில் தான் போட்டியிட்டு வென்றார். ஆனால் வென்ற பின்னர் என்ன செய்தார்? கொழும்பில் ஒரு வீட்டில் செத்தேனே சிவனே என்றிருந்தவர். தன்னை ஒரு ஆன்மீகவாததி என்று சொல்லிக் கொண்டவர். அவரது குரு பாலியல் ஆசாமி பிரேமானந்தாவின் பிறந்த நாளை ஆண்டுதோறும் தடபுடலாகக் கொண்டாடியவர். அமைச்சர் சுவாமிநாதன் போன்றோர் அதில் பங்குபற்றியிருக்கிறார்கள். பிரேமானந்தாவுக்கு புளியங்குளத்தில் ஒரு கோயில் கட்டி அவரது உருவத்தை பிரதிட்சை பண்ணி வைத்திருக்கிறார். பொதுவாக இந்துமத சுவாமிமார்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கும். சிவந்த மேனி, கட்டுமட்டான உடல்வாகு, நெற்றியில் பட்டை, நடுவில் குங்குமம், கழுத்தில் கொட்டை, கையில் கமண்டலம் இப்படி அட்டகாசமாகத் தோற்றமளிப்பார்கள்.

நித்தியானந்த சுவாமி (இயற்பெயர் இராசசேகரன்) இப்படிப்பட்ட வசீகரம் படைத்த ஒரு ஆன்மீகவாதி. அவரிடம் சினிமா நடிகைகளே மயங்கி விடுகிறார்கள். பிரபல நடிகை இரஞ்சிதா அவரோடு உல்லாசத்தில் ஈடுபடும் படுக்கையறைக் காட்சிகள் தொலைகாட்சிகளில் வெளிவந்தன. இன்றைக்கு அரசியலைவிட மிக அதிகமாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை கொள்ளையடிக்கும் தொழில் இந்த சாமியார் தொழில்தான். பல கோடிகளைக் கொள்ளை அடிக்கும் (உயர்பதவிகளில் இருக்கும்) அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இந்த சாமியார்கள்தான் புகலிடம்.

இந்த நித்தியானந்தா சுவாமியை பிட பிரபலமானவர் பிரேமானந்தா. சத்திய பாபா பாணியில் சூனியத்தில் இருந்து திருநூறு, குங்குமம், சங்கிலி, மோதிரம், கைக்கடிகாரம், பவுர்ணமி நாளன்று வாயில் சிவலிங்கம் வரவழைப்பது போன்ற சித்து விளையாட்டுக்கள் செய்பவர். பெரிய இடத்துப் புள்ளிகள் எல்லாம் தரிசனத்துக்கு அவர் காலடியில் தவம் கிடந்தார்கள்.

1989 இல் திருச்சி, விராலிமலை பாத்திமாக நகரில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கி அதில் 'பூபாலகிருஷ்ண ஆச்சிரமம்' என்ற பெயரில் ஒரு ஆச்சிரமத்தைத் உருவாக்கினார். சுமார் நூறு சிறுவர்கள், சிறுமியர் ஆசிரமத்தில் வளர்க்கப்பட்டனர். இவர்கள் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். 1983 நடந்த இனக் கலவரத்தை அடுத்து இந்தக் குழந்தைகளோடு பிரேமானந்தா தமிழ்நாட்டில் குடியேறினார்.

பிரேமானந்தா அணிந்திருந்த காவி உடைக்கு உள்ளே ஒரு காமவெறி பிடித்த ஒரு கொடூர மிருகம் ஒளிந்திருந்ததை அதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. பிரேமானந்தா பகலில் இளித்தவாயர்களுக்கு உபதேசம் இரவில் ஆச்சிரமத்தில் வாழ்ந்த பராயம் வந்த, வராத இளம் சிறுமிகளோடு பலவந்தக் காமக் களியாட்டம். கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் கூட்டம் காலம் காலமாக இருந்து வருகின்றது. பணம், புகழ், உல்லாச வாழ்க்கைக்காக இந்த ஆசாமிகள் (போலி) சாமிகளாக மாறிவிடுகின்றனர்.

ஆனால் ஊழ்வினை சும்மா விடுமா? அது உருத்து வந்து ஊட்டும். முற்பகல் செய்தது பிற்பகல் விளையும். 1993 இறுதி வரை பிரேமானந்தாவின் காட்டில் மழை நன்றாகப் பெய்து கொண்டிருந்தது. ஆனால் நாளடைவில் பிரேமானந்தா அங்கு வரும் பெண் பக்தைகளுக்கு தீா்த்தத்துடன் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து கலவி இன்பத்தில் ஈடுபட்ட செய்தி வெளியில் கசியத் தொடங்கியது. அவரது காமப் பசிக்கு அவரது பாதுகாப்பில் இருந்த அநாதைச் சிறுமிகள் பலர் பலியானார்கள் என்ற செய்தியும் யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளியில் தெரிய வந்தது.

பிரேமானந்தாவின் பசிக்கு இரையான ஆச்சிரமத்தைச் சேர்ந்த ஆதரவற்ற சுரேஷ்குமாரி மற்றும் லதா என்ற இரு பெண்கள் தப்பிச் சென்று தாங்கள் பிரேமானந்தாவால் கற்பழிக்கப்பட்டதாகவும் அதனை வெளிப்படுத்தி விடுவதாகக் கூறிய பொறியாளர் இரவி என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம வளவுக்குள்ளேயே புதைக்கப்பட்டதாகவும் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர்.

பிரேமானந்தாவின் ஆச்சிரமம் நொவெம்பர் 14, 2004 அன்று காவல்த் துறையால் சுற்றி வளைக்கப்பட்டது. பிரேமானந்தா கற்பழிப்பு (13 சிறுமிகள்) மற்றும் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையின் போது ஆகக்குறைந்தது 13 சிறுமிகளைப் பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று. இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று... பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் கருவின் தந்தை சாட்சாத் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதி மன்றத்தில் அறிவியல் ஆதரங்களோடு சமர்ப்பித்தனர்.

சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆச்சிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

நீண்ட நீதி விசாரணைக்குப் பின்னர் ஓகஸ்ட் 21, 1997 இல் புதுக்கோட்டை நீதிபதி ஆர். பானுமதி அவர்கள் பிரேமானந்தா குற்றவாளி எனக் கண்டு அவருக்கும் ஏனைய மூவருக்கும் 1997ம் ஆண்டு இரட்டை ஆயுள் தண்டனையும், 66.4 இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது (http://www.puthinappalakai.net/2015/04/24/news/5513). பிரேமானந்தாவுக்கு உதவியாளராக இருந்த கமலானந்தாவுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மொத்தம் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு டிசெம்பர் 2002 இல் சென்னை உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவரது தண்டனை உறுதிசெய்யப்பட்டது. இந்திய உச்ச நீதிமன்றம் 2005 இல் பிரேமானந்தாவின் மேன்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

விக்னேஸ்வரன் பாலியல் சுவாமி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அவரது சாட்சியத்தை நிராகரித்தது. அவரை ஒரு கற்பனைவாதி (wishful thinker) என்று சொல்லி அவரது தலையில் குட்டு வைத்தது.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக வந்த அடுத்த ஆண்டு நொவெம்பர் 2014 இல் பூபாலகிருஷ்ண ஆச்சிரமம் சென்று பிரேமானந்தாவின் சமாதியில் வழிபட்டார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

பிரேமானந்தாவின் கற்பழிப்பு, கொலை வழக்கில் இரட்டை ஆயுள்த் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட மாகாண சபையின் கடிதத் தலைப்பில் மார்ச் 14, 2015 அன்று ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டது.

பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்த நான்கு இலங்கைத் தமிழர்களுக்குமான தண்டனையை 2005 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

கமலானந்தாவும், ஏனைய இருவரும், இந்த வழக்கில் போலியாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பி்ரேமானந்தா ஆசிரமத்தையும், அதன் சொத்துக்களையும் பராமரிக்க வேண்டியுள்ளதால், அதனைப் பொறுப்பெடுக்க வேறு யாரும் இல்லாத நிலையில், அப்பாவிகளான இவர்களை விடுதலை செய்யுமாறும், முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரியிருந்தார்.

சிறிலங்காவின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசரான ஒருவர், இந்திய நீதியமைப்பை கேள்விக்குள்ளாக்கியிருந்ததும் குற்றவாளிகளைச் சுற்றவாளிகள், அப்பாவிகள் என்று சுட்டிக்காட்டியிருந்ததும் இந்தியாவின் வெளித்துறை மூத்த அதிகாரிகளை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைய வைத்தது.

பல நோய்களால் பீடிக்கப்பட்ட பிரேமானந்தா புதுக்கோட்டை சிறையில் பெப்ரவரி 21, 2011 இல் தனது 59 ஆவது வயதில் காலமானார். ஆனால் அவரது சீடர்கள் அவரைக் கடவுள் அவதாரம் எனச் சொல்லிக் கொண்டு அவருக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறார்கள். அதில் ஒருவர் விக்னேஸ்வரன். தில்லி நீதிமன்றத்தில் அவருக்கு அனுசரணையாக சாட்சி சொன்னவர். பிரேமானந்தாவின் கோடிக் கணக்கான சொத்துகளுக்கு விக்னேஸ்வரன் ஒரு அறங்காவலர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஸ்வரன் தனது பேச்சை வாசிக்கத் தொடங்கு முன்னர் “பரப்பிரமம்” என்று சொல்வார். அந்தப் பரப்பிரமம் வேறு யாருமல்லை. மாவட்ட நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு, பின்னர் சென்னை உயர் நீதி மன்றம், தில்லி உச்ச நீதி மன்றம் போன்றவற்றால் தண்டனை உறுதி செய்யப்பட்ட காமுகன், கொலையாளி பிரேமானந்தாதான்.

விக்னேஸ்வரனின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை, அவநம்பிக்கை பற்றிக் கவலை இல்லை. ஆனால் அரசியல்வாதி விக்னேஸ்வரனின் தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்படும் கோணல் மாணல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதாற்குக் காரணம் பொதுமக்கள் அவரது இருண்ட பக்கத்தையும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.

இத்தகைய பின்னணியைக் கொண்ட விக்னேஸ்வரன் "சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக் கும் நான் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்' என்கிறார். விசுவாசம் என்ற சொல்லுக்கு விக்னேஸ்வரனின் அகராதியில் வேறு பொருள் இருக்கிறது போல் தெரிகிறது.

ஓகஸ்ட் 17, 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் "எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன்" என்று அறிக்கை விட்டது சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாக நடந்து கொண்டதைக் காட்டுகிறதா?

மாற்றுத் தலைமை வேண்டும் அதற்காக தமிழ் மக்கள் பேரவையை சம்பந்தனுக்குத் தெரியாமல் தொடங்கி, இப்போது தமிழ் அரசுக் கட்சி நியமனம் தராவிட்டால் வேறு கட்சிகளோடு கூட்டணி சேருவேன் அதுவும் சரிப்பட்டு வராவிட்டால் தனிக் கட்சி தொடங்கப் போகிறேன் என்று சொல்வது சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும விசுவாசமாக விக்னேஸ்வரன் நடந்து வருவதைக் காட்டுகிறதா?

"நான் எந்தக் கட்சியிலும் இல்லை, நான் எந்தக் கட்சியையும் ஆதரிப்பவன் இல்லை, நான் நடுநிலையாளன்" என்பதே விக்னேஸ்வரனின் அரசியல் நிலைப்பாடு. அப்படியிருக்க "நான் சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்' என்று அவர் எப்படிச் சொல்ல முடியும்? சம்பந்தன் தலைமை வகிக்கிற தமிழ்த் தேசியக் கட்சியை அவர் குறிப்பிடுவதாக இருந்தால் அது கட்சியே அல்ல. அது ஒரு தேர்தல் கூட்டணி. வி.புலிகள் காலம் தொட்டு அதுதான் நிலைப்பாடு.

மாற்றுத் தலைமை வேண்டும் அதற்காக தனிக் கட்சி தொடங்கப் போவதாகச் சொல்லும் ஒருவரை, அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் ஒருவரை எப்படி தமிழ் அரசுக் கட்சி தேர்தலில் போட்டியிட, அதிலும் முதலமைச்சர் வேட்பாளாராக களம் இறக்கச் சம்மதிக்கும்?

"கட்சியில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டுள்ளார்கள்.' என்றும் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்துகிறார். கட்சியில் இருந்து யாரும் அவரை வெளியேற்ற முனையவில்லை. "தமிழ் அரசுக் கட்சி அவரைத் தேர்தலில் நிறுத்தாது, அதற்கான வாய்ப்பு இல்லை. அவர் கட்சியோடு இணங்கிப் போகாமல் தனது தனிப்பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கின்றார். அவ்வாறான நிலையில் அடுத்த தடவையும் தனிப்பாதையில் செல்பவரைக் கட்சி திரும்பவும் நியமிக்குமென அவரும் எதிர் பார்க்க முடியாது. " என்று சுமந்திரன் கூறுகிறார்.

மொத்தத்தில் விக்னேஸ்வரன் மூலமைச்சர் கனவில் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வருகிறார். தனது கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார். அதன் விளைவு யாதாக இருக்கும் என்பதை அவர் அறியாதிருக்க நியாயமில்லை.

Read more...

Saturday, June 16, 2018

அமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக சிங்கப்பூரில் சந்தித்துக் கொண்டனர். கொரிய தீபகற்பத்தில் அமைதியை நோக்கிய நடவடிக்கையாக இது புகழப்படுகின்ற அதேவேளையில், இவர்களுக்கு இடையில் எட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படும் உடன்பாடு என்னவாய் இருந்தபோதிலும், ஆசிய-பசிபிக்கின் கீழமைந்த பதட்டங்கள் கூர்மையடைய மட்டுமே இருக்கின்றன.

ஒரு “மிகநேர்த்தியான திறம்பட்ட” ஆவணம் என்று அமெரிக்க ஜனாதிபதி அழைத்த ஒன்றில் கிம் மற்றும் ட்ரம்ப் கையெழுத்திட்டதன் பின்னர், ட்ரம்ப், வட கொரியத் தலைவர் வாஷிங்டனுக்கு விஜயம் செய்ய நிச்சயமாக “அழைப்பு விடுக்க”ப் போவதாக தெரிவித்தார். இந்த ஆவணம் விரைவில் வெளியிடப்படவிருந்தது.

ட்ரம்ப்பும் கிம்மும் செந்தோஸா தீவில் உள்ள ஆடம்பர Capella ஹோட்டலில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு சந்தித்தனர். சிங்கப்பூர் அரசாங்கம் இந்த இடத்தை கிட்டத்தட்ட ஒரு இராணுவமயமாக்கப்பட்ட மண்டலம் போல் மாற்றியிருந்தது. இருவரும், அவர்களது மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் உடனிருக்க, ஒருவருக்கொருவர் நேரடியாக, கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் பேசிக் கொண்டனர்.

முன்னதாக ட்ரம்ப், விடயங்கள் உடனடியாக அமெரிக்கா நினைத்ததிசையில் நடக்காது போகுமாயின் முதல் நிமிடத்திலேயே பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்வதற்கு மிரட்டல் விடுத்திருந்தார். ஆயினும், ட்ரம்ப்பும் கிம்மும் சந்தித்து கைகளைக் குலுக்கிக் கொண்டதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்: “நாம் ஒரு மகத்தான பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருக்கிறோம், அது பெரும் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். அது என் கவுரவம். நாம் ஒரு மிக அருமையான உறவை ஏற்படுத்திக் கொள்ளவிருக்கிறோம், அதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை.”

கிம்மும் இதேபோன்ற வீறுகொண்ட மொழியில் பதிலளித்தார்: “பழைய சங்கிலிகளும் நடைமுறைகளும் நமது முன்னோக்கிய பாதையில் முட்டுக்கட்டைகளாக வேலை செய்தன, ஆனால் அவற்றை நாம் வெற்றி கண்டு இன்று இங்கே வந்திருக்கிறோம்.”

ஆரம்ப பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அவர்களது நிலைப்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பது தெரிந்தது, இருவரும் “அருமையான உறவு உணர்வு” கொண்டிருந்ததாக ட்ரம்ப் அறிவித்தார். அவரவரது ஆலோசகர்களும் பங்குபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அவர்கள் முன்நகர்ந்தனர்.

அமெரிக்க பிரதிநிதிகள் குழுவில் வெளியுறவுச் செயலரான மைக் பொம்பியோ, தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்டன் மற்றும் ட்ரம்ப்பின் அலுவலர் தலைவரான ஜோன் கெல்லி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். உச்சிமாநாட்டிற்கு முன்வந்த பேச்சுவார்த்தைகளில் கெல்லி ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்ததாகக் கூறப்படுகிறது.

கிம் உடன் வட கொரியாவின் வெளியுறவு அமைச்சரான ரி யோங்-ஹோ, சர்வதேச விவகாரங்களுக்கான துணைத் தலைவர் ரி சு-யோங், மற்றும் தொழிலாளர்கள் கட்சியின் மையக் கமிட்டியின் துணைத் தலைவரான கிங் யோங்-சோல் —இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாக ட்ரம்ப்பை வாஷிங்டனில் சந்தித்திருந்தார்— ஆகியோர் இருந்தனர்.

பின்னதாக, இரண்டு தரப்பும் ஒரு வேலைநேர மதிய உணவு முழுவதுமாக பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தன. இரவு 8 மணிக்கு அமெரிக்காவுக்கு கிளம்புவதற்கு முன்பாக மாலை சுமார் 4 மணியளவில் ட்ரம்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசவிருந்தார், கிம் பிற்பகல் 2 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து கிளம்ப ஆயத்தமாயிருந்ததாக அமெரிக்க ஊடங்கள் தெரிவித்தன.

வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒரு சிறு அறிக்கையின் பகுதி ஒன்று இவ்வாறு தெரிவித்தது: “அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன, அவை எதிர்பார்த்ததை விடவும் துரித வேகத்தில் முன்னேறியிருக்கின்றன.”

திட்டமிடப்பட்ட ஒரு கூட்டு செய்திக்குறிப்பிற்கான மொழியை இறுதி செய்வதற்காக, நேற்று, தென் கொரியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும் இப்போது பிலிப்பைன்ஸுக்கான தூதராக இருப்பவருமான அமெரிக்காவின் சுங் கிம், அமெரிக்க விவகாரங்களுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமையில் இருக்கும் வட கொரியாவின் சான்-ஹூய் உடன் சந்தித்துப் பேசியிருந்தார். பேச்சுவார்த்தைகளுக்குப் பரிச்சயமான அமெரிக்க அதிகாரி ஒருவர் நியூயோர்க் டைம்ஸுக்கு அளித்திருந்த தகவலின் படி, அணுஆயுதமய அகற்றம், வட கொரியாவுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள், மற்றும் இரண்டு தரப்புகளும் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் ஆகிய மூன்று பகுதிகளை அந்த அறிக்கை கொண்டிருக்கும்.

இந்த சந்திப்பு குறித்த ஒரு சாதகமான கருத்து அலையை சுழல விடுவதற்காக இரண்டு தரப்புகளும் வேலை செய்தன. சிங்கப்பூரின் பிரதமரான லீ ஹீசியன் லூங் -இடம் ட்ரம்ப் தெரிவித்தார்: “நாளை குறிப்பாக நாங்கள் ஒரு மிக முக்கியமான சந்திப்பைக் கொண்டிருக்கிறோம். விடயங்கள் மிக நல்ல முறையில் செல்லும் என்று நான் நினைக்கிறேன்.” இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்ற கவலையில் இருந்து வந்திருக்கின்ற ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே, மற்றும் தென் கொரியாவின் ஜனாதிபதி மூன் ஜே-இன் ஆகியோருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.

பொம்பியோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதற்கு முன்னர் அமெரிக்கா அளிக்க விரும்பியிருந்தவற்றில் இருந்து ..... மாறுபட்டதும் தனித்துவமானதுமான பாதுகாப்பு உத்தரவாதங்களை மேற்கொள்வதற்கு” அமெரிக்கா ஆயத்தமாயிருப்பதாக தெரிவித்தார். அவர் அதற்கு மேல் எதனையும் விளக்கிக் கூறவில்லை.

வட கொரியாவின் கொரிய மைய செய்தி முகமை கூறுகையில், ”மாறிய சகாப்தத்திற்கு ஏற்ப” தீபகற்பத்தின் அணுஆயுதஅகற்றம் மற்றும் “பரஸ்பர கவலைக்குரிய” ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக “கொரிய தீபகற்பத்தில் ஒரு நிரந்தரமான மற்றும் தாக்குப்பிடிக்கக் கூடிய அமைதிகாக்கும் பொறிமுறை” ஒன்றை கட்டியெழுப்புவது சம்பந்தமான “விரிந்து பரந்த மற்றும் ஆழமான கண்ணோட்டங்களை” இந்த உச்சிமாநாடு பரிவர்த்தனை செய்து கொள்ளும், என்று தெரிவித்தது.

இந்த பேச்சுவார்த்தைகளுக்கு சீனா சம்பிரதாயமான ஆதரவை தெரிவித்தது. அதன் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான ஜெங் ஷுவாங் தெரிவித்தார்: “இந்த சந்திப்பு சாதகமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்றும் கொரிய தீபகற்பத்தின் அணுமயமாக்கல் அகற்றத்திற்கும் ஒரு அரசியல் தீர்வுக்கும் பங்களிப்பு செய்யும் என்றும் சீனா உண்மையாக நம்புகிறது.”

ஆயினும், இவை எதுவொன்றுமே, ஒரு அமைதியான முடிவு தொடுதூரத்தில் இருப்பதன் அர்த்தமாக இல்லை. அனைத்து தரப்புகளுமே “கொரிய தீபகற்பத்தின் அணுமயமாக்கல் அகற்றத்திற்கு” அழைப்பு விடுத்தபோதிலும், அவற்றின் அர்த்தம் வெவ்வேறாய் இருக்கிறது. வடகொரியாவும் சீனாவும் தென் கொரியாவில் அமெரிக்க துருப்புகள் மற்றும் ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் ஒரு குறைப்பை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, போருக்கான தயாரிப்பில் சீனாவைத் தனிமைப்படுத்துவதே அதன் நோக்கமாய் இருக்கிறது.

பல தசாப்தங்களாய், வட கொரிய அச்சுறுத்தலாக சொல்லப்பட்டதை, ஆசிய-பசிபிக்கில் தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகப்படுத்துவதற்கே அமெரிக்கா, பயன்படுத்தி வந்திருக்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய திருப்பம்” மற்றும் இப்போது ட்ரம்ப்பின் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போர் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக, சீனா மீது —ஒரு பொருளாதார சக்தியாக அதன் வளர்ச்சி அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது— நிதிரீதியான மற்றும் இராணுவரீதியான அழுத்தத்தை அமெரிக்கா செலுத்தி வந்திருக்கிறது.

ஒன்று அமெரிக்காவின் சுற்றுவட்டத்திற்குள் நகர்ந்து விட வேண்டும், இல்லையேல், சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் முனைப்பில் முதல் பலியாக முற்றுமுதல் அழிவை சந்திக்க வேண்டும் என்ற தெரிவை வட கொரியாவுக்கு ட்ரம்ப் நிர்வாகம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

“கொரிய தீபகற்பத்தின் முழுமையான மற்றும் சரிபார்க்கத்தக்க அணுஆயுதமயமாக்கல் அகற்றமே அமெரிக்கா இறுதியாக ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரே முடிவாக இருக்கும்” என்பதை பொம்பியோ மீண்டும் வலியுறுத்தினார். முழுமையான, சரிபார்க்கத்தக்க, திரும்பவியலாத அணுமய அகற்றம் என்பதன் சுருக்கமான CVID என்பதைக் குறிப்பிட்டு அதில் 'V' [சரிபார்க்கத்தக்க என்பது] முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்தினார். “ஒரே ஒருமுறை தான் அது [சரிபார்ப்பு] நடக்கும், அது துரிதமாக மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்த அவர், அது நடைபெறும் வரையில் வட கொரியா மீதான முடக்கும் தடைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

சியோலில் இருந்து பேசிய தென் கொரியாவின் மூன் ஜே-இன் கருத்து கூறினார்: “இரண்டு தலைவர்களும் ஒரு மிகப்பெரும் விதத்தில் பேச்சுவார்த்தைக்கு துவக்கமளித்திருக்கிறார்கள் என்ற போதிலும் கூட, சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை முழுமையாகத் தீர்ப்பதற்கு, ஒரு வருடமோ, இரண்டு வருடங்களோ, அல்லது அதற்கும் அதிகமாகவும் கூட பிடிக்கக் கூடிய ஒரு நீண்ட நிகழ்ச்சிப்போக்கு நமக்கு தேவைப்படக் கூடும்.”

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வாஷிங்டனின் மாறும் இராணுவ மற்றும் புவியரசியல் தேவைகளுக்கு ஏற்ப, ஒரு நீண்ட காலத்திற்கு, அது காட்டும் வளையங்களுக்குள் எல்லாம் குதித்து வெளிவர வட கொரியா நிர்ப்பந்திக்கப்படும். பியோங்கியாங் உடனான 2007 ஆறு-தரப்பு உடன்பாட்டினைத் தொடர்ந்து, வாஷிங்டன், கூடுதலான சரிபார்ப்பு நடவடிக்கைகளை ஒருதலைப்பட்சமாகக் கோரி, அந்த உடன்பாட்டிற்குக் குழிபறித்தது. ஒபாமா நிர்வாகம் சீனாவைச் சுற்றிவளைக்கும் அதன் பிரச்சாரத்தை தொடங்கிய சமயத்தில் இந்த உடன்பாட்டை முற்றிலுமாகக் கைவிட்டது. எந்த புதிய ஒப்பந்தத்திலும் இருந்து விலகி ஓடுவதற்கு அமெரிக்கா இதேபோன்றதொரு தந்திரத்தைப் பயன்படுத்தக் கூடும்.

இறுதியாக, வட கொரியா வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு முழுமையாக அடியொற்றி நடக்கத் தவறுமானால், அமெரிக்காவினால் முற்றிலுமாய் அழித்தொழிக்கப்படுகின்ற அபாயத்திற்கு அது முகம்கொடுக்கும். ஒரு உடன்பாடு எட்டப்படுமானால், நேரடியாக சீனாவின் எல்லையில் ஒரு அமெரிக்க-ஆதரவு ஏவல் அரசின் சாத்தியத்தை —இன்னும் அமெரிக்க துருப்புகளின் சாத்தியத்தையும்— அது எழுப்புகிறது. இரண்டில் எதுவாயிருப்பினும் அது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவி-மூலோபாய மோதலை தீவிரப்படுத்த மட்டுமே செய்யும்.

நன்றி சோசலிஸ வலைத்தளம்

Read more...

Friday, June 15, 2018

ஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும் - வை எல் எஸ் ஹமீட்

பிறை பார்த்தல் தொடர்பாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு மீண்டும் ஒரு பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் எப்போது பெருநாள் கொண்டாட வேண்டும்; எனத்தீர்மானிப்பதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு எந்த அதிகாரமும் இருக்கமுடியாது. இலங்கையில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிவாயில்களில் அதுவும் ஒன்று, அவ்வளவுதான்.

பிறைகண்டு நோன்பு பிடிக்கவும் பிறைகண்டு நோன்பை விடவும்தான் இஸ்லாம் கூறியிருக்கின்றது. இதற்குள் புதிதாக வானசாஷ்திரத்தைத் தூக்கிக்கொண்டு ஒரு கூட்டம் வானசாஷ்திர மத்ஹபை உருவாக்கி முஸ்லிம்களை குழப்பிக்கொண்டிருக்கின்றது.

மறுபுறம் உலமாசபை பிறைகண்டு பிடிப்பதையும் பிறைகண்டு விடுவதையுமே இதுவரை பேணிவருகின்றது சிலநேரங்களில் சில சறுக்கல்கள் இருந்தபோதிலும்கூட.

“வியாழக்கிழமை பிறைகண்டால் வெள்ளிக்கிழமை பெருநாளும் பின் ஒரு நோன்பை கழா செய்யவேண்டும்”; என்ற மார்க்க சட்டத்தை உலமாசபைத் தலைவர் மௌலவி ரிஸ்வி முப்தி அவர்கள் தெளிவாக கூறியிருந்தார்.

இந்நிலையில் வியாழன் பிறை தென்பட்டாலும் வெள்ளி பெருநாள் இல்லை; என்ற நிலைப்பாட்டில் “வெள்ளிக்கிழமைதான் பிறைக்குழு கூடும்;” என்ற தீர்மானம் ஜம்மிய்யத்துல் உலமாவுடன் இணைந்து எடுக்கப்பட்டதாக கொழும்புப் பெரிய பள்ளிவாசலினால் அறிவிக்கப்படுகிறது.

பிறைகண்டால் பெருநாளாகும். பெருநாள் தினத்தில் நோன்பு வைப்பது ஹறாமாகும். இந்நிலையில் இந்த முடிவு ஏன்? அவ்வாறாயின் மார்க்கச்சட்டம் தெரியாமலா உலமா சபைத்தலைவர் ஏற்கனவே அந்த அறிவிப்பைச் செய்தார்? அல்லது அவர் ஏற்கனவே செய்த அறிவுப்பு சரியென்றால் இப்பொழுது இந்த பிழையான தீர்மானத்திற்கு உலமாசபை இணங்கியதேன்?

பிறைகண்டு நோன்பை விடத்தான் இஸ்லாம் சொல்லியிருக்கின்றதே தவிர கொழும்புப் பெரிய பள்ளிவாசலோ அல்லது உலமாசபையோ எப்பொழுது பெருநாள் என்று அறிவிக்கின்றதோ அப்பொழுது பெருநாள் கொண்டாடுங்கள்; என்று இஸ்லாம் சொல்லவில்லை

இருந்தாலும் பிறைகாணப்பட்டதை உறுதிப்படுத்தி முழு நாட்டிற்கும் அறிவிப்பதற்கும் ஓர் ஏற்பாடு வேண்டும்; என்பதற்காக நாட்டின் உயர் மார்க்க ஸ்தாபனம் என்ற அடிப்படையில் உலமாசபையை மக்கள் ஏற்றுக்கொள்ளலாம். கொழும்புப் பெரிய பள்ளிவாசல் இதற்குள் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் இல்லை.

எது எவ்வாறான போதிலும் இந்தத் தீர்மானத்திற்கும் ஏற்கனவே உலமாசபைத் தலைவர் செய்த அறிவிப்பிற்குமுரிய நியாத்தை, மார்க்க விளக்கத்தை உலமாசபை மக்களுக்கு அவசரமாக தெரிவிக்க வேண்டும். வீண் குழப்பங்களுக்கு இடமளிக்க வேண்டாம்.

இல்லையெனில் முஸ்லிம் விவகாரத்திணைக்களம் உடனடியாக தலையிட்டு ஒரு தகுதியான குழுவை நியமித்து பிறை காணப்பட்டதை உரிய சாட்சிகளுடன் மார்க்கச் சட்டப்படி அறிவிப்பதை உறுதிப்படுத்தி மக்களுக்கு தெரிவிக்கும் பணியைச் செய்யவேண்டும்.

இங்கு செய்யவேண்டியதெல்லாம் பிறை காணப்பட்டதை உறுதிப்படுத்துகின்ற பணிமாத்திரமே தவிர எப்பொழுது பிறைபார்க்க வேண்டும்; எப்பொழுது பெருநாள் கொண்டாடவேண்டும்; என்று உத்தரவுபோடுவதல்ல. ஏற்கனவே அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் ( ஸல்) அவர்களும் எப்பொழுது பெருநாள் கொண்டாடவேண்டும்; என்று உத்தரவு போட்டுவிட்டார்கள்.

இவர்களின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு பிறைகண்ட பின்பும் நோன்பு பிடித்து ஹறாத்தைச் செய்யமுடியாது. எனவே, முஸ்லிம் விவகார அமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

நாம் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் வீண் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.

( குறிப்பு: இது ஓர் நன்னோக்குடன் எழுதப்பட்டிருக்கின்றது. அல்லாஹ்வுக்காக, யாரையும் தாக்கும் விதமாகவோ அல்லது மனதைப் புண்படுத்தும் விதமாக இந்த புனித ரமளானில் யாரும் பின்னூட்டங்களை இட்டுவிடவேண்டாம். அல்லாஹ்வைப் பயந்துகொள்வோம்)

Read more...

Sunday, June 3, 2018

பதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்

கடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில டாண் ரிவி யின் இயக்குனர் குகநாதன் அவர்களால் தொகுத்து புத்தகமாக்கப்பட்டிருக்கின்றது. „மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக ... „ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் அறிமுகமும் மீளாய்வும் இன்று சூரிச் நகரில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் தமிழர் போராட்டத்தில் இடம்பெற்ற வஞ்சகங்கள், தவறுகள், சறுக்கல்கள், தந்திரங்கள், தொடர் தோல்விகள் என்பன தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட கட்டுரைகள் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் இன்றைய அவலநிலைக்கு சுகு அவர்கள் இலங்கை அரசு, புலிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி சுட்டுவிரலை நீட்டுகின்ற அதே தருணத்தில் தங்களது வரலாற்றுத்துரோகங்கள் மீது எவ்வித மீள்பார்வையையோ அன்றில் சுயவிமர்சனத்திற்கு வழிவிட்டுள்ளமையையோ அவதானிக்க முடியவில்லை.

இந்நிலையிலேயே இன்றைய புத்தக மீள்அறிமுக நிகழ்வில் சமகால அரசியல் களநிலைதொடர்பில் சுகு எனப்படுகின்ற திருநாவுக்கரசு சிறிதரன் பேசவுள்ளார்.
இந்நிலையில் அவர் பின்வரும் விடயங்களுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்கின்றோம்.

புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு தொடர்பில் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் கட்டாய ஆட்சேர்ப்பினை இலங்கையில் அறிமுகம் செய்துவைத்த முன்னோடிகள் என்ற பெருமை ஈபிஆர்எல்எப் என்ற இயக்கம் அங்கமாக இருந்த த்றீஸ்டார் என்ற அமைப்பினையே சாரும். இந்நிய-இலங்கை ஒப்பந்த காலத்தில் ஈபிஆர்எல்எப் னர் மேற்கொண்ட கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் அடாவடித்தனங்களே புலிகளமைப்பிற்கு பெரிதும் ஆதரவைத்தேடித்தந்திருந்தது. மேலும் புலிகள் சக அமைப்புக்களை தடை செய்து அவர்களை கொலைசெய்து ஏன் சிலரை உயிருடன் டயர் போட்டு எரித்து புலிகள் தமது மனிதவிரோத செயற்பாடுகளை வெளிக்காட்டியிருந்தனர். மக்கள் புலிகள் மீது வெறுப்புக்கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் த்றீஸ்டார் வடகிழக்கிலாடிய பேயாட்டம் புலிகள் இவ்வமைப்புக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை சரியானதே என்ற நிலைக்கு மக்களை இட்டுச்சென்றது. இந்த வரலாற்று உண்மைதொடர்பில் புத்தகத்திலுள்ள 129 கட்டுரைகளில் எந்தக்கட்டுரையிலும் தகவல்களில்லை.

ஈபிஆர்எல்எப் இனரால் பலவந்தமாக சிவில்பாதுகாப்பு படைக்கென இணைக்கப்பட்ட இளைஞர்களை நடுத்தெருவில் கைவிட்டு இந்திய இராணுவத்துடன் தப்பியோடியபின்னர் புலிகளால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் கொத்துக்கொத்தாக கிழக்கிலங்கையில் கொன்றுகுவிக்கப்பட்டனர். இவ்விளைஞர்களின் குடும்பத்தினருக்கு ஈபிஆர்எல்எப் பினரது பதில் என்ன ?

தமிழ்ப்பாசிஸம் மற்றும் அதற்கு துணைபோன ஊடகங்கள், அவற்றின் வறட்டுத்தன்மை தொடர்பில் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சமாதான காலத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை ஊடகங்கள் „இனம்தெரியாதோர்' என்ற பதம்கொண்டு வெள்ளைபூசியதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வயோக்கியத்தனத்தின் பிதாமகனாக செயற்பட்ட சிவராமிற்கு விழாவெடுக்கும் ஊடகவிபச்சாரிகளுடன் சுகு கள்ளதொடர்பு வைத்திருக்கின்றார் என்பது சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற புத்தகவெளியீட்டில் அம்பலமாகியதுடன் இன்று இடம்பெறவுள்ள சுகுவின் புத்தக அறிமுக நிகழ்விலும் புலிப்பாசித்திற்கு தீனிபோடுமொருவரே பிரதான பாகம் வகிக்கின்றார். எனவே சுகுவின் எழுத்துக்கும் செயலுக்குமிடையிலான முரண்பாடு தொடர்பில் விளக்கம் தேவைப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ்பாசிஸத்தின் முகவர்கள் என தொடர்ச்சியாக தெரிவித்துவருகின்ற சுகு, த.தே.கூ வின் வாசல்படியில் சீட்டுக்கேட்டு தவம்கிடக்கின்றார். சீட்டுக்கிடைத்துவிட்டால் சுகுவும் பாசிஸத்தின் ஏஜன்ராவார் என்பதில் எவ்வித ஐயமும் காட்டாததன் பின்னணிபற்றியும் எதிர்பார்கின்றேன்.



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com