Sunday, January 21, 2018

யார் இந்த ஹேமசந்திரரா & அருண் ஹேமசந்திரா? யார் துரோகிகள்? கேட்கிறார் DR

நீண்ட விளக்கம். வயதில் குறைந்தவர்களுக்கு என்னை பற்றிய, என்னால் ஒரு அறிமுகம்.

நான் படித்துமுடிந்தபின் பெருன்பான வைத்தியர்களைபோல் சிறந்த வாழ்கைகாக தூரதேசமோ, அல்லது பிரச்சனையில்லாத ஒரு இடமாக போய் இப்போது உள்ளாதிலும்பார்க்க கூடுதலாக பணம் சம்பாதித்து இருக்கலாம்.

ஆனால் என் ஊர் ஒரு பின்தங்கிய, பலவழிகளில் புறகனிக்கபட்ட இடமாகையினால் அதற்கு என்னைபோன்றவர்களின் சேவை தேவை என உணர்ந்து என்னை உருவாகிய எனது பிறந்த மண்னிக்கே அரசாங்க உத்தியோகத்துடன் மாற்றம்பெற்று வந்தேன்.

நான் வைத்தியராவதற்கு முதல் காரணம் நான் ஒரு பின்தங்கிய மாவட்டமான திருகோணமலையில் படித்ததுதான். அதன் கோட்டாவிலேயே முதல் முதலாக திருகோணமலியில் இருந்து மருத்துவகல்லூரிக்கு போனபெருமை என்னையும், என்னுடன் சேர்ந்த மூண்றுபேர்களையும் சேரும். அதிலும் திருகோணமலை இந்துகல்லூரி என்று எடுத்துகொண்டால் கூடுதல் காலம் இந்துகல்லூரியிலே படித்து மருத்துவபிரிவுக்கு சென்றவன் என்ற பெருமை என்னையே சாரும்.

சிறியகால இடைவெளியில் நான் எனது தனியார் மருத்துவமனையை 1981 இல் தொடங்கினேன்.

முதல் முதலாக எனது தனியார் மருத்துவ தொழிலை நான் கிண்னியாவில் இருந்துதான் ஆரம்பித்தேன். அதற்கு எனது கிண்ணியா முஸ்லிம் சகோதர்கள் தங்களின் ஒத்துழைப்பை நிறையவே தந்தார்கள். அதில் முக்கியமாக சக்கரியா ஹாஜியார் முதல் இடத்தில் இருந்தார். ஒரு சத காசையேனும் எதிர்பார்காமல் தனது கட்டிடத்தை எனக்கு தந்தார். அவரை, அவரின் உதவியை, கிண்ணியா மக்களின் அன்பையும், ஆதரவையும் நான் உயிர் இருக்கும்வரை மறக்கமாட்டேன். அந்த உருக்குள் காலடிவைத்த முதலாவது Medical Officer நான்தான் என்ற பெருமையும் எனக்குண்டு.

போக்குவரத்துக்கு எனக்கு ஒரு மோட்ட சைக்கிலை தந்து உதவிய சிங்கள அன்பரின் பேர் எனக்கு ஞாபகம் இல்லை. அவர்கூட எனக்கு மிகவும் குறைந்த விலையிலும் வட்டியில்லாத நீண்டகால கடனுக்கும் அந்த வாகனத்தை தந்து உதவிபுரிந்தார்.

நாட்டில் ஏற்பட்ட வன்செயலின் காரணமாக வெளியில் செல்லமுடியாதினால் 1984 ஆண்டுதொடக்கம் எனது தொழிலை முழுனேரமும் எனது வீட்டிலேயே தொடர்ந்தேன்.

அந்த காலகட்டத்தில் ஒரு தழிழ் மகனால் எப்படி ஒரு தனியார் தொழிலை செய்வது என்பது அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும்.

என்னிடம் துவேசம் இருக்கவில்லை. எல்லா பக்கதிலும் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். இன்பமும், துன்பமும், ஏற்றமும், இறக்கமும் வாழ்கையில் மாறி மாறி வந்தது. வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பலரும் உதவினார்கள்.

ஊரில் தழிழ் அரசியல்வாதிகள் எலோரும் ஓடி ஒழிந்துகொண்டவேளையில் நான்மட்டும்தான் இன்றுவரை உயிருக்கும் அஞ்சாமல் ஊரைவிட்டு ஓடாமல் பல இன்னலுக்குமத்தியிலும் இந்த ஊரிலேயே தொடர்ந்து வாழ்துவருகிறேன் என்பதை பெருமையுடன் என்னால் கூறமுடியும்.

அக்காலகட்டதிலும்சரி 1987 இல் இந்தியன் இராணுவம் வந்தபோதும் சரி இன்னல் பட்ட எத்தனையோ சாமானிய மக்கள்களை சாவின் விளிம்புகளிலும், சிறைகூடங்களில் இருந்தும் என்னால் காப்பற்றபட்டவர்கள் பலர் இன்றும் இங்கும், உலகில் பல பாகங்களிலும் பரந்து வாழுகின்றனர். அந்த நேரத்தில் இங்கு எந்த சாணக்கியனும், சம்பந்தன் ஐயாவுமில்லை. உதவிபெற என்னிடமே மக்கள் வந்தனர்.முடியுமான உதவிகளை நான் செய்து கொடுத்தேன். என்னால் உதவியடைந்தவர்கள் பலபேர்கள். ஆனால் என்னால் பாதிக்கபட்டவர்கள் ஒருவராவது இல்லை என்பதையும் தைரியதுடன் என்னால் கூறமுடியும்.

காலங்கள் நகர்தன. தழிழனுக்கு தீர்வுதிட்டம் வருமோ, வராதோ தெரியாது. ஆனால் மக்களுக்கு உதவவேண்டுமென்றால் அரசாங்கத்துடன் சேர்ந்துதான் செயல்படமுயும் என்ற தீர்மானத்து வந்தேன்.
யாரையும் காட்டிகொடுக்கவும் இல்லை. என் இனத்துக்கு செய்யவேண்டிய நன்மைகளை தனி ஒருவனாகவும், குழுக்களாகவும் என்னால் செய்யகூடியமாதிரி இருந்தது.

நான் அன்று தூர நோக்குடன் செய்தபோது என்னை துரோகி என்று அழைத்தவர்கள், அதை இப்போது தழிழ் தலைவர்கள் செய்யும்போது “சாணக்கியம”என்கிறார்கள்.

நான் துரோகியென்றால் என்ர மண்டையில எப்போவோ போட்டு இருப்பார்கள். அது ஒண்றும் பெரியவேலையில்லை அவர்களுக்கு. ஆனால் என்னில் ஒரு பிழையையும் கண்டுபிடிக்கபடவில்லையென்பதுதான் உண்மை.

குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம், துப்பாக்கிசத்தம் ஊரெங்கும் கேட்கும்போதெல்லாம், வீடுகள், வியாபார நிலையங்கள் எரியும்போதெல்லாம், இயர்கை அனர்தங்கள் நிகளும்போதெல்லாம் இனவேறுபாடின்றி எனது வைத்தியசாலை மக்கள் சேவைக்கு எப்போதுமே இலவசமாக நாட்கனக்கில் திறந்திருக்கும். அப்போது திருகோணமலையில் யார் உதவிக்கு வந்தார்கள். இந்த ஹேமசந்திராவை தவிர யார் இருந்தார்கள். எந்த சாணக்கியனும் இருக்கவில்லை.

இது எனது பரம்பரை ஊர். நாங்கள் எங்களது 14 வது பரம்பரையில் இப்பொது வாழுகின்றோம். இங்கு வரவழைக்கபட்டவர்கள் நாம். பஞசம் பிழைக்க வந்தவர்கள் இல்லை. அதனாலையே ஊர்பற்று அதிகம். மண்பற்று கூட. அநியாயம் நடக்கும்போது தட்டிகேகனும். இனி இழப்பதற்கு உயிரை தவிர ஒண்றுமில்லை.
எனது காலம் ஓய்விற்கு வந்துவிட்டது. சாதிக்கவேண்டியவற்றைசெல்லாம் சாதித்தாயிற்று. அரசியலில் நான் ஈடுபடமாட்டேன். யாரும் கெட்டதை செய்தால் தட்டிகேட்காமலும் விடமாட்டேன்.

இனி என்னத்தை செய்தாய் என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். எல்லாவற்றயும் ஞாபகத்தில் வைத்திருக்கமுடியாது.

1. மூண்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுதேர்தல் வைத்து கணக்குகாட்டி மக்களின் அனுமதியை பெற்றபின்னரே நிர்வாகத்தை தொடரவேண்டும் என்ற சட்டத்தை மதிக்காமல், 18 வருடகாலமாக எந்தவித பொதுக்கூட்டமோ, கணக்குகாட்டலோ இல்லாமல் இருந்த கோணேசர்கோவிலின் நிர்வாகத்துக்கு எதிராக எனது முதல் சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடங்கியது.

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்தே 22 வருடங்களை கடத்திவிட்டார் பதில் நீதவான். அதில் திருகோணமலை அரசியல் சாணக்கியனும் எங்கே தனது வாக்கு வங்கி குறைந்துவிடுமோ என்று ஒருவித ஒத்துழைப்பையும் தராது ஒதிங்கியே இருந்தார் என்பது மற்றுமொரு அவரின் சாணக்கியம்.

பதில் நீதவானின் மறைவின் பின் உரிய ஜனநாயகமுறையில் தேர்தல் நடாத்தபட்டு மக்களின் கையில் நிர்வாகம் ஒப்படைக்கபட்டது. இந்த நிர்வாகத்தில் நான் எந்த உரிமையும் கோரி பதவிகள் பெறவுமில்லை. பெறபோவதுமில்லை.

2. இந்துகல்லூரியின் பழையமாணவர் சங்கத்தை மீழ கட்டமைத்து இருமுறை அதற்கு தலைவராகவும் இருந்தேன். அந்த 12 வருட காலத்தில் திரு. தண்டாயுதபாணி அதிபருடன் ஒண்றாக பணிபுரிந்தகாலம் எமக்கும் எமது கல்லூரிக்கு ஒரு பொன்னான காலம் என்று சொல்லலாம்.

ஆரம்ப பாலர்பிரிவு இல்லாத நிலையில் நாம் ஆண்டு 1 தொடக்கம் 5 வரையில் ஒரேதரத்தில் அதை கல்லூரிக்கு பெற்று இயங்கவைத்தோம்.

திருகோண்மலையில் முதலாவதாகவும், கிழக்கு மாகாணத்தில் இரண்டாவதுமான தேசிய பாடசாலையாக கல்லூரியை தரமுயர்துவதற்கு எனக்கு உதவியவர்கள் எனது துவேசமில்லா போக்கை பாராட்டிய பெரும்பான்மை இனத்தை தேர்ந்தவர்கள்தான்.

இந்த காலகட்டத்தில் நாங்கள் விபுலானந்த அடிகளாருக்கு ஒரு சிலையை வைத்தோம். அந்த பெருமையும் என்னைத்தான் சாரும். சிலையை செய்து உங்களைபோன்றவர்கள் எதிர்காலத்தில் அறியவேண்டும் என்பதற்காக எனது பேரையும் பதிவு செய்துள்ளேன். அதை இன்றுவரை பராமரிதும் வருகிறேன்.

வசதியில்லாத குழந்தைகளுக்கு எனது தகப்பனாரும் முன்னால் கோணேஸ்வரா வித்தியாலய தலைமை ஆசிரியருமான சு.கு.குமாரசாமி ஐயர் அவர்களின் பேரினால் மாதத்துக்கு ஆயிரம் ரூபாபடி ஐந்து பல்கலைகழகம் செல்லும் மாணவர்களுக்கான இரண்டு வருடத்துக்கான நிதியையும் அளித்துள்ளேன்.

3. எனது நண்பர்களுடன் சேர்ந்து ஜனாதிபதி நடமாடும் செயலகத்தின்போது திருகோணமலைக்கு ஐந்து ஏக்கர் விஸ்தீரனத்தில் ஒரு பொறியியல் கல்லூரியையும் பெற்று கொடுத்தோம்.

4. அந்த ஜனாதிபதி சேவையின்போது ஒருங்கு இனைக்கபட்ட பல்கலைகழகத்தயும் அமைத்து நிரந்தரமாக ஒரு பல்கலைகழத்தை இங்கே கொண்டுவர ஒரு அடிதளத்தை அமைத்து கொடுத்தோம்.

5. மக்களின் ஒற்றுமையை உறுதிபடுத்த ஒரு “ ஐக்கிய சமாதான ஸ்தூபி” யை பொது பஸ்தரிபிடத்துக்குமுன் 1991 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அன்றைய ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசாவினால் திறந்து வைத்தேன். அதை 27 வடுடங்களின்பின்னரும் இன்றும் காணமுடியும். அதிலும் எனது பேர் உள்ளது.

தொழிழ்கள் பல தொடங்கி வேலைவாய்பற்ற நூற்றுகனக்கான ஏழை தொழிளாரர்களுக்கு வேலைவாய்பை அளித்தேன்.

6) 1991 ஆம் ஆண்டு முதலாவது லயன்ஸ் கழகத்தையும், 2000 ம் ஆண்டு இரண்டாவதையும் ஆரம்பித்து அதன் தலைவராக இருந்து பல சமூக சேவைகளை செய்தும், எனது தலைமையில் 46 கல்வீடுகளையும் கட்டி ஏழை மக்களுக்கு கொடுக்கும் சந்தர்பமும் எனக்கு கிட்டியது.

7. தற்போது யுத்ததினால் பாதிக்கபட்ட மக்களுக்கு தினம் தினம் உதவி வருகிறேன். முன்னைய போராளிகளுக்கும் நிதி உதவி செய்து வருகின்றேன்.

8. தினமும் தேடிவரும் மக்களுக்கு இயலுமான உதவிகளை செய்துவருகின்றேன்.

9. என்னை தொடர்ந்து எனது ஒரே மகன் தனது அரசியல் பயணத்தை JVP யுடன் சேர்ந்து ஆரம்பித்து உள்ளார். ஏன் JVP என்று கேட்பவர்களும் உண்டு. சம்பூரின் அனல் மின் நிலையத்திற்கு எதிராக பலரும் போராடும்போது, அதற்கு உதவிதர சாணக்கியன் சம்பந்தன் அவர்களும், துரைரெட்டினம் MP அவர்களும் இந்தியாவில் சாணக்கியனின் குடும்பம் இருப்பதால் மக்கள் எக்கேடுகெட்டு அழிந்துபோனாலும் பரவாயில்லை, எனக்கு என் குடும்ப சுயனலம்தான் பெரிது என்று, எந்த ஆதரவையும் தரமறுத்துவிட்டார்கள். அரசாங்கத்தை சேர்ந்த சிங்கள, முஸ்லிம் MP மார்களும் ஆதரவு தர மறுத்து விட்டார்கள்.

அந்த நேரத்தில் JVP தான் கைகொடுத்து மனித அடிபடை உரிமைகள் மீறும் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு எதிராக அருண் ஹேமசந்திராவால் ஒரு வழக்கு தொடரபட்டு , அதன் பின்னர் அந்த கட்டுமான பணி கைவிடபட்டது.

10. கங்குவேலி அகஸ்திகர் சிவன் கோவிலுக்கு என்று ஒரு அடி காணி இல்லதபோது அப்போதைய அரசாங்க அதிபரை கூட்டிகொண்டு சென்று இரண்டு ஏக்கர் காணியை உடனடியாக சாப்பாட்டுமேசையில் வைத்து பெற்று கொடுத்தார் அருண் ஹேமசந்திரா.

11. பல தசாப்தங்களின்பின் தழிழருக்கு சொந்தமான 100 ஏக்கர் காணியை அதேயிடத்தை சேர்ந்த படுகாடு என்னுமிடத்தில் ஊர்காவல் படையின் கட்டுப்பாட்டிலிருந்து அன்மையில் மீழபெற்று மீண்டும் தழிழ் பேசும் மக்களுக்கு கொடுத்தார் எனது மகன் அருண் ஹேமசந்திரா.

12. எந்த ஒரு அரசியல் அந்தஸ்தும் இல்லாதபோதும் 23 பேர்களுக்கு அரசு சார்பான கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு பெற்று கொடுத்தார் அருண் ஹேமசந்திரா. இதில் 90% மேலானோர் தழிழ பேசும் மக்கள். இதை எந்த ஒரு தழிழ் அரசியல் வாதிகளும் இன்றுவரை செய்தார்களா?

13. விளாங்குளத்தில் 60 வருடங்களுக்குமேல் உறுதியில்லாமல் வாழ்ந்துவரும் தழிழ் சனங்களுக்கு, உறுதியனை பெறும் முகமான உத்தியோக பூர்வமான வேலைதிட்டம் ஆரம்பிக்கபட்டுவிட்டது அருண் ஹேமச்சந்திராவால்.

14. இத்தனைக்கும் அருண் ஹேமசந்திராவுக்கு இன்னமும் 27 வயது முடியவில்லை. அவரின் 23 வயதிலேயே அவருக்கு JVP யின் தேசிய பட்டியலில் பாராளுமண்ற உறுப்பினருக்கான இடம் ஒதுக்கபட்டிருந்த்தது.

15. TNA போன்ற இனவாத கட்சியினால் துரோகிகள் என்று ஒதுக்கபட்டவர்கள்தான் நாம். எம்மால்தான் இவைகள் செய்யபட்டன.

இப்பொது சொல்லுங்கள் யார் இனவாதி? யார் தழிழ் மக்களில் பற்று அற்றவர்கள்?

யார் துரோகி?

மக்களின் அன்றாடதேவைகளின்போது கூட இருந்து உதவும் நாம் துரோகியா, அல்லது பிரச்சனையான காலத்தில் தங்களின் உயிரையும், குடும்பத்தையும் காப்பாற்ற வெளி நாட்டுக்கு ஓடி ஒழியும் சாணக்கியர்கள் துரோகிகளா?

பணத்திற்கு ஆசைபட்டு ஒதுக்கபட்ட தழிழ் மக்கள்களின் வேலைவாய்புக்களை விற்றவர்கள் துரோகிகளா அல்லது அன்றும், இன்றும், என்றும் உங்களுடன் வாழும் நாங்கள் துரோகிகளா?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com