Sunday, April 24, 2016

த.தே.கூ தொடர்ந்து இனவாதத்தை தூண்டுகின்றது. விஜித்த ஹேரத்

தமிழ் இனவாதிகள் தனிநாடு, வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற தந்திரங்களை பயன்படுத்தி தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளருமான விஜித்த தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் :

மாகாண சபையினால் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய வட மாகாண சபை தவறியுள்ளதாக சாடினார்.

இது குறித்து வட பகுதி அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமக்கு ஒரே ஒரு காரணியாக இருக்கும் இனவாதத்தை மீண்டும் மேலெழுப்புவதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைந்து சமஷ்டி நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள யோசனை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது :

மக்கள் விடுதலை முன்னணி உயர் நீதிமன்றத்திற்கு சென்றமையாலேயே வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முடிந்தது எனறு பதிலளித்தார்:

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com