Sunday, April 24, 2016

மட்டு மாவட்ட அதிபருக்கு நற்சான்றுதல் அளிக்கின்றார் கருணா அம்மான்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் ஏதோ ஒர் கட்சியின் அரசியல் நிகழ்சி நிரலின் கீழ் அமைந்துள்ளதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக மாவட்ட அரச அதிபர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் நேரடிக்குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர்.

பல்வேறு பிரதேச செயலகங்களின் செயற்பாடுகள் பிரசேத செயலாளர்களுக்கும் அரச அதிபருக்குமான முரண்பாடுகள் காரணமாக மக்களுக்கான அன்றாட சேவை வழங்குதலில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதனையும் , இதன் காரணமாக உருவான வேலைப்பகிஸ்கரிப்புக்கள் , ஆர்ப்பாட்டங்கள் என்பன பல்வேறு தரப்பினரின் விமர்சனத்திற்கு உள்ளானதும் யாவரும் அறிந்தது.

இந்நிலையில், மேற்குறித்த பின்னடைவுகள் விமர்சனங்கள் குறித்து புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியான கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தனது முகநூலில் கீழ்கண்டவாழு கருத்துரைத்துள்ளார்.


அண்மை காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்களின் தலையீடு கூடுதலாக அரச நிருவாகத்தில் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. இதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். உதாரணமாக அண்மையில் மட்டக்களப்பு அரச அதிபரை விமர்சிப்பதில் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் போட்டி போட்டு நிற்பதை காணக்கூடியதாகவுள்ளது. இதன் பக்கவிளைவுகளை புரியாது வெறும் பழிவாங்கும் நோக்குடன் செயற்படுவீர்களேயானால் மாற்று சக்திகளுக்கு நீங்களே வாய்ப்புக்களை வளங்குகின்றீர்கள் என்றுதான் அர்த்தம் கொள்ளவேண்டும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு இந்தவிடையத்தில் அவ்வளவு காத்திரமானதாக தெரியவில்லை. தூரநோக்குடன் செயற்படவேண்டிய இந்தகாலத்தில் வெறும் குழந்தைகளைப்போல் செயற்படுவது வேடிக்கையான விடையமாகதெரிகின்றது. இதில் தமிழ் ஊடகவியலாளர்களும் நிதானத்தை கடைப்பிடிப்பது கட்டாய கடமையாகும். ஏற்கனவே மாகாணசபையை சம்பந்தரின் அறிவின்மையால் இழந்து நிற்கும் நாங்கள் தமிழ் அதிகாரிகளை காப்பாற்றுவதில் கவனமெடுக்கவேண்டும்.

மட்டக்களப்பு அரசாங்க அதிபரை பொறுத்த வரையில் துணிந்து செயற்படக்கூடியவர். இவரின்கடந்தகால சேவைகளை நாம் மறந்து விடமுடியாது. வன்னியிலே எமது தமிழினம் போரினால்பாதிக்கப்பட்டு உயிரைக்கையிலேபிடித்துக்கொண்டு எல்லாவற்றையும் இழந்து வெறும் நடைப்பிணங்களாக வன்னிக்கு வந்த போது இரவு பகல் பாராது அந்த மக்களுக்காக கடுமையாக உழைத்தவர் என்பதை தமிழ்மக்கள் மறந்துவிட முடியாது. அதையபோல் மட்டக்களப்பு மாவட்டத்திலையும் அவர் ஆற்றிய சேவைகளையும் மறந்து விடமுடியாது. அன்றைய காலத்தில் H N D A மாணவர்களுக்கு நியமனங்கள் வளங்கும் விடையத்தில் என்னுடன் துணிந்து நின்று செயற்பட்டவர் என்பதும் மிகவும் முக்கியமான விடையமாகும். 400க்கு மேற்பட்டமாணவர்கள் அன்று பயனடைந்தார்கள். அந்தகாலத்தில் இலங்கையில் ஒருமாவட்டத்தில் கூட H N D A மாணவர்களை உள்வாங்கவில்லை. ஆனால் நாம் வளங்கிவைத்தோம். நான் நினைக்கின்றேன் அந்தமாணவர்கள் வாழ்நாளில் அதை மறக்கமாட்டார்கள்.

தற்போது மட்டக்களப்பு பாராளமன்ற உறுப்பினர் சிறினேசன் அவர்களின் அறிக்கையை நான் பார்த்தபோது இது மாற்று சக்திகளுக்கு வாய்ப்பாகவே அமையும் வெறும் அரசியலுக்காக அறிக்கை விடுவதை விடுத்து தமிழ் அதிகாரிகளுக்கு பக்கமலமாக செயற்படவேண்டியது உங்கள் கடமையாகும். புதிதாக உருவாகும் ஊடகவியலாளர்களும் மட்டக்களப்பு மண்ணின் நன்மைகருதி சற்று நிதானமாக செயற்படும் படி கேட்டுக்கொள்கின்றேன்.
ஏனெனில் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்காங்கிரஸ்சுடன் தேனிலவு கொண்டாடத்தொடங்கியுள்ளார்கள். இது முற்று முளுதாக தமிழ்மக்களுக்கு செய்கின்ற துரோகமாகும் ஏற்கனவே மைத்திரிக்கு வாக்குப்போடச்சொல்லி தமிழ்மக்களுக்கு ஒன்றுமே நடக்கவில்லை வெறும் அரசின் கைப்பொம்மைகளாகத்தான் TNA யின் செயற்பாடுள்ளது. இவற்றையெல்லாம் உணர்ந்துகொண்டு ஊடகவியலாளர்கள் பொறுமைகாக்க வேண்டும் என பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.

நன்றி கருணா அம்மான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com