Sunday, February 7, 2016

புலிகள் விடயத்தில் விக்கினேஸ்வரனுக்கு கன்னத்தில் பளார் விட்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் இளவரசர் ஹூசைன் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றார்.

இந்த வரிசையில் இன்று வட மாகாணத்திற்கு சென்ற அவர் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் சென்றார் என்பது சிறப்பம்சமாகும். அத்துடன் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்தார். இதன்போது முன்னாள் பயங்கரவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என விக்னேஸ்வரன் மனித உரிமைகள் ஆணையாளரை வேண்டியுள்ளார்.

இவ்வேண்டுதலை மிகவும் கடுந்தொனியில் நிராகரித்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர். பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு மனித உரிமைகளை மீறியதாக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களது வழக்கு விசாரணைகளை மூடிவிட்டு அவர்களை பொது மன்னிப்பு என்ற போர்வையில் விடுதலை செய் என இறைமையுள்ள அரசொன்றை கோருவது மனித உரிமைகள் ஆணையாளரகிய எனது செயற்பாடுகளுக்கு முற்றிலும் முரணானதாக அமையும். ஆகவே அவர்கள் நிரபராதிகளாயின் அவற்றை நீதிமன்றில் நிரூபித்து விடுதலை செய்துகொள்ளுங்கள். இதையே நான் சிரியாவிலும் சொல்லியுள்ளேன். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக சிரியர்களுக்கு ஒரு நியாயத்தையும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நியாயத்தையும் என்னால் வழங்க முடியாது என்ற போர்வையில் அவரது பதில் கடுந்தொனியில் அமைந்திருந்தாக சந்திப்பில் கலந்து கொண்ட வட மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

இதேநேரம் வட மாகாண சபை உறுப்பிர் டெனீஸ்வரன், ஐஸ்ஐஸ் பயங்கரவாதிகளை ஐ.நா அடக்கவேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அது மூன்றாம் உலக யுத்தத்திற்கு வழிவிடும் என்றும் ஹூசைனிடம் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com