Sunday, February 7, 2016

கூட்டு எதிர்க்கட்சியினர் சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 9ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் கரு ஜயசூரியடம் இது குறித்து கோரிக்கை முன்வைக்க எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காது, சுயாதீனமாக இயங்க கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தரப்பினர் தம்மை கட்டுப்படுத்துவதனால், சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியின் பாத்திரத்தை தமது தரப்பு வகித்த போதிலும் நாடாளுமன்றில் அதற்கான சந்தர்ப்பங்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com