Wednesday, February 3, 2016

நான் டிஐஜி என்றால் இன்று விமல் வீரவன்ச உள்ளே இருப்பார். அனுர குமார திஸாநாயக்க

இந்நாட்டில் நான் ஓர் டிஐஜி யாக இருந்தால் இன்று விமல் வீரவன்ச உள்ளே இருப்பார் என்று தெரிவித்துள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறிய அவர், மக்களில் பணத்தில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பத்து லட்சம் செலவில் 6 அதிசொகுசு வீடுகள் வீடுகள் அதிகார சபையினால் அமைக்கப்பட்டது. இவ்வீடுகளில் ஒரு வீடு முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சிராந்தியின் சகோதரருக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 5 வீடுகளும் விமல் வீரவன்சவின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வீடுகளுக்காக அவர்களிடம் இருந்து தலா எட்டு லட்சம் பணமே அறவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களின் பணத்தை ஏப்பம் விட்டு விமல் வீரவன்ச இன்று வெளியே இருப்பது நல்லாட்சி என்று கூறுவோருக்கு அவமானமானது என்று தெரிவித்தார்.

மேலும் கடவுச் சீட்டு மோசடியில் விமான நிலையத்தில் விமல் கைது செய்யப்பட்டபோது மகிந்த ரணிலுடனும் மைத்திரியுடனும் பேசி விமலை விடுவித்து கொண்டதாகவும், இவ்விடயத்திற்கு துணை போன மைத்திரி மற்றும் ரணில் மீது அவரது குற்றச்சாட்டுக்களை வைத்தார்.

மேலும் விமல் தனது கட்சியை சேர்ந்த 49 பேருக்கு தனது அமைச்சிலும் வீடமைப்பு அதிகார சபையிலும் வேலை செய்வதாக சம்பளம் வழங்கி வந்தாகவும் ஆனால் அவர்கள் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தாகவும் தெரிவித்த அனுர குமார இவ்வாறு மக்களில் பணத்தை வீண்விரயம் செய்த விமலை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com