Friday, February 12, 2016

26 வருடங்களுக்கு பின்னர் மயிலிட்டி ஆலயங்களில் நாளை விளக்கேறுகின்றது.

யாழ் மயிலிட்டி பிரதேசத்திலிருந்து இற்றைக்கு 26 வருடங்களுக்கு முன்னர் பிரதேச மக்கள் யாவரும் இடம்பெயர்ந்திருந்தமை யாவரும் அறிந்ததே. இம்மக்களை அங்கு மீள் குடியேற்றுவதற்கு தடையாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த காலங்களில் வடக்கிற்கு சென்ற ஜனாதிபதியிடம் இவ்விடையம் நேரடியாக முறையிடப்பட்டதுடன் இதன் பிரதான தொடர்பாளராக பா.உ அங்கஜன் செயற்பட்டு வந்திருக்கின்றார்.

இம்முயற்சிகளின் பலனாக நாளை அம்மக்களின் மீள்குடியேற்ற நிகழ்வு உத்தியோக பூர்வமாக ஆரம்பமாகவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

பிரதேசத்தை விட்டு 26 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களுடன் நாளை மயிலிட்டிக்கு செல்லவுள்ள பா.உ அங்கஜன் ராமநாதன் , அங்கு பாழடைந்து காணப்படும் செபமாலை மாதா கோயில் மற்றும் கொத்துக்குளம் அம்மன் கோயில் ஆகியவற்றை புனரமைத்து விளக்கேற்றி வைக்கவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com