Friday, January 15, 2016

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : Hard Talk

ஹிரு-TV உடனான Hard-Talk நிகழ்ச்சியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் :

கேள்வி : உங்களுடைய பாட்டனாரோ அக்காலத்தில் 50 க்கு 50 ஐ கேட்டார். நீங்கள் முழுதையும் அல்லவா கேட்கின்றீர்கள்?

பதில் : எங்களுடைய கட்சி தெளிவாக சொல்வதென்னவென்றால் சிறுபாண்மையினருக்கு ஏனைய இனத்தவரைப்போல் அங்கீகாரம்
வேண்டுமென்பதாகும்.

கேள்வி : நீங்கள் முதலாவதாக பாராளுமன்றுக்கு தெரிவானது எந்த ஆண்டில்?

பதில் : 2001 ல்

கேள்வி : 2010 ற்கு பின்னர் உங்களுக்கு பாராளுமன்றுக்கு செல்ல முடியாதுபோனதுதானே?

பதில் : ஆம் போக முடியாது போனது.

கேள்வி : புலிகளியக்கமிருக்கும்போது பாராளுமன்றுக்கு செல்லக்கூடியதாகவிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு புலிகளியக்கம் அழிந்த பின்னர் பாராளுமன்று செல்ல முடியாதுபோனது ஏன்?

பதில் : இது புலிகளிக்த்துடன் சம்பந்தமானதோர் பிரச்சினை அல்லவே. நாம் புலிகளியக்கம் சமர்ப்பித்த வேண்டுதல்களை சமர்ப்பிக்கவில்லையே. நாங்கள் சமஸ்டி முறைக்காகவே முன்நிற்கின்றோம்.

கேள்வி : தமிழ் மக்கள் சமஸ்டி முறையை ஏற்றுக்கொள்கின்றார்களானால் ஏன் தமிழ் மக்கள் உங்களையும் உங்கள் கட்சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை?

பதில் : த.தே.கூட்டமைப்பும் சமஸ்டி என்றுதான் கூறுகின்றது. வாக்குகளைப் பெறத்தான் அவ்வாறு கூறுகின்றனர். ஆனால் நாங்கள் கூறுவது யாதெனில் தமிழ் மக்கள் த.தேகூ வினரால் மக்கள் மீண்டுமொருமுறை ஏமாற்றப்படப்போகின்றார்கள் என்பதே!

கேள்வி : 1977 ல் தான் தமிழர் ஒருவர் இந்நாட்டில் எதிர்கட்சித் தலைவரானார். அமிர்தலிங்கம் அவர்கள் சிறந்தவரா அன்றில் சம்பந்தரா?

பதில் : அமிர்தலிங்கம் அவர்கள் அன்று ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்களின் அரசிற்கு எதிர்ப்பைக் காட்டினார். ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. இவர்கள் வாக்குறுதிகளை வழங்கியே பாராளுமன்றுக்கு வந்துள்ளார்கள்.

கேள்வி : அவ்வாறு வழங்கிய வாக்குறுதிகள் என்ன?

பதில் : முதலாவது - சமஸ்டி முறையூடாக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பார்கள் என்பது
இரண்டாவது - சர்வதேச விசாரணையை முன்னெடுப்பார்கள் என்பது.

கேள்வி : நீங்கள் அக்காலத்தில் மீகவும் பலமாக நம்பியிருந்த அமெரிக்கா கூட இப்போது அந்த நிலையில் இல்லையே?

பதில் : மஹிந்த ராஜபக்ச அவர்கள் இல்லாது போனதுடன் அந்த தேவையும் இல்லாது போயுள்ளது.

கேள்வி : அமெரிக்காவின் மாற்றம் தமிழ் மக்களுக்கு சாதகமானதா பாதகமானதா?

பதில் : பாதகமானது.

கேள்வி : தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளே பிளவுகள் உண்டா? இல்லை ?

பதில் : பிளவு உண்டு என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் பிரச்சினை உள்ளது.

கேள்வி : நீங்களும் விக்னேஸ்வரன் அவர்களும் இணைந்து „தமிழர் பேரவை' என்ற அமைப்பை வடக்கில் எதற்காக உருவாக்கி கொண்டீர்கள்?

பதில் : தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு வேண்டுமென்று அதற்காக முன்வந்துள்ளோம்.

கேள்வி : நீங்கள் உருவாக்கியிருக்கின்ற அமைப்பு ஓர் சிவில் அமைப்பு. அவ்வமைப்புக்கு விக்னேஸ்வரன் போன்ற அரசியல்வாதி ஒருவரை தலைவராக்கி கொண்டது ஏன்?

பதில் : விக்னேஸ்வரன் மக்கள் ஏற்றுக்கொள்கின்றதோர் நபர்.

கேள்வி : அவ்வாறாயின் சம்பந்தன் அவர்களை மக்கள் மிகவும் ஏற்றுக்கொண்டுள்ளார்களே. சம்பந்தன் அவர்களை பேரவைக்கு தலைவராக நியமித்திருக்கலாமே?

பதில் : உண்மையைக் கூறினால் சம்மந்தன் அவர்கள் இந்நாட்டில் ஐக்கிய இலங்கை என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

கேள்வி : நீங்கள் அங்கம் வகிக்கின்ற பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன். அவரும் சமஸ்டி முறையையா கேட்கின்றார்?

பதில் : ஆம்.

கேள்வி :இந்த பேரவை த.தே.கூ வுக்கு எதிராக செயற்படுகின்ற அமைப்பா?

பதில் : எதிராக செயற்படுகின்ற அமைப்பல்லவே. த.தே.கூ விலுள்ள பங்காளி அமைப்புக்களான ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிறேமச்சந்திரன் புளொட் சித்தார்த்தன் ஆகியோரும் இங்குள்ளார்கள். த.தே.கூ
தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அச்சமுறத் தேவையில்லை.

கேள்வி : அவ்வாறாயின் த.தே.கூ வை அச்சுறுத்தவா இவ்வாறானதோர் பேரவையை உருவாக்கினீர்கள்?

பதில் : அச்சுறுத்தவல்ல. மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்.

கேள்வி : மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் உங்கள் பேரவை வரும் தேர்தலில் போட்டியிடுமா?

பதில் : நாங்கள் முன்னேறிச் செல்வோம். எதிர்காலத்தில் பார்போம் என்ன நடக்கப்போகின்றது என்பதை.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com