Saturday, January 16, 2016

ராஜீவ் காந்தியின் கொலையிலிருந்து அதிரடிப்படை கற்றுக்கொண்ட பாடம்.

பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி புலிப்பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டுதாரியான தமிழ் பெண்ணொருவரால் தற்கொலைத்தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருந்ததும் கொலையாளி மலர்மாலையுடன் சென்று குண்டினை வெடிக்கவைத்திருந்ததும் யாவரும் அறிந்தது.

இந்த கொலையிலிருந்து இலங்கை அதிரடிப்படையினர் கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு தமது பிரமுகர்களை காத்து வருகின்றது. அதன் அடிப்படையில் யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அம்மனுக்கு செலுத்தும் மாலை முதல் விருந்தினருக்கு அணிவிக்கும் பொன்னாடை வரை சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது.

தேசிய பொங்கல் விழா, யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி ஸ்ரீ இராஜஇராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிலையில் பிரதமர் மட்டும் கலந்து கொண்டார். ஜனாதிபதி கலந்து கொள்ளாமைக்கான காரணம் யாழில் மஹிந்தவின் எடுபிடிகளான குதிரைக் கஜேந்திரன் , அனந்தி எழிலன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோா் மேற்கொண்ட ஆா்ப்பாட்டம் எனத் தெரியவருகின்றது.

இந்நிலையில், ஆலய வழிபாட்டுக்கு மக்களால் எடுத்துச்செல்லப்பட்ட மலர் மாலையில் இருந்து விருந்தினர்களுக்கு அணிவிப்பதற்கான பொன்னாடை வரை அனைத்தும் விசேட அதிரடிப்படையினரால் சோதனைக்குட்படுத்தபட்டதோடு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் மாலையில் இருந்து பாலலி வீதி, காங்கேசன்துறை வீதி ஆகியன விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகை தினம் என்பதால் மக்கள் பொருள் கொள்வனவில் அதிகம் ஈடுபட்டிருந்தபோதிலும் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் வீதிகளில் குவிக்கபட்டு தமது பாதுகாப்பு கடமைகளை செவ்வனே செய்திருந்தனர் என்பது சிறப்பம்சமாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com