Thursday, January 28, 2016

அமெரிக்க இராணுவத்திற்கு தளங்கள் மற்றும் துறைமுகங்களை திறந்துவிடுவது குறித்த பேச்சுவார்த்தையில் இந்தியா. By Wasantha Rupasinghe

இந்திய செய்தி ஊடக அறிக்கைகளின்படி, பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு (LSA) பற்றிய பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டது. இது இறுதியாக்கப்படுமாயின், இந்திய துறைமுகங்கள், இராணுவம் மற்றும் விமானப்படை தளங்களை எரிபொருள் நிரப்புதல், மற்றொருவிதத்தில் அமெரிக்கா அதன் இராணுவத் தளங்களை படிநிலைப்படுத்துதல், ஆயத்தங்களுக்கு வாய்ப்பளித்திடல் என்ற வகையில் அமெரிக்கா வாடிக்கையாக பயன்படுத்திட ஏதுவாக இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு அனுமதிக்கும்.

இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டின் கீழ், இந்திய இராணுவத்திற்கும் அமெரிக்காவிற்கு ஒத்த உரிமைகள் இருப்பதாக அமெரிக்கா உத்தரவாதம் அளிக்கும். என்று கருதப்படுகிறது. எனினும், இது பெரும்பாலும் ஒரு உயிரற்ற எழுத்தாகவே இருக்கும், அமெரிக்கா ஒரு ஆசிய மற்றும் பூகோள இராணுவ சக்தியாக உள்ளபோது, இந்திய இராணுவத்தின் எல்லை என்பது துணைக்கண்டம் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிவரைக்குமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஒரு அதிகாரபூர்வ இராணுவ கூட்டணியை நோக்கி இந்தியாவின் ஒரு மிகப் பெரிய மாற்றம் இருக்கும் என்பதை இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டின் மீதான தொடக்க பேச்சுவார்த்தைகள் குறிக்கின்றன. சீனாவை பொருளாதார மற்றும் இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தி அதனை இராணுவ ரீதியாக சுற்றிவளைக்கும் விதமான வாஷிங்டனின் உந்துதலுக்கு காரணமான, "ஆசியாவில் முன்னிலை" என்ற அமெரிக்காவின் கொள்கையுடன் ஏற்கனவே இந்தியா மிகத் தீவிரமாக ஒத்துழைத்து வருகிறது. தற்போது இந்தியாவின் வடக்கு அண்டை நாடான சீனாவிற்கு மிக நெருக்கமான வரம்பிற்குள் அமெரிக்க விமானங்கள் மற்றும் கப்பல்களைக் கொண்டுவரும் வகையில், இந்திய வசதிகளைப் அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க புது டெல்லி தயாராகிக்கொண்டிருக்கிறது.

ஜோர்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகம் 2006ல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்துடன் ஒரு மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்பதால், இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டில் கையெழுத்திட இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு மீதான பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவுடன் நடத்திய போதும், இவ் உடன்பாடு இந்தியாவின் "மூலோபாய சுயாட்சி"க்கு ஆபத்து விளைவிக்கும் மற்றும் சீனாவை எரிச்சலூட்டும் போன்ற கவலைகளின் காரணமாக இறுதியில் கையெழுத்திடுவதில் இருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி பின்வாங்கிற்று.

இந்திய வசதிகளை அமெரிக்க இராணுவம் பயன்படுத்திக்கொள்ள வெளிப்படையாக அனுமதிப்பது என்பது மிகுந்த உணர்திறன்கொண்ட மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினையாகும் என்ற காரணத்தினால், பா.ஜ.க. அரசாங்கம் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டினை ஊர்ஜிதப்படுத்துவது தொடர்பாக வாஷிங்டன் உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பது பற்றி எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், செய்தி ஊடக அறிவிப்புகளை இந்திய அரசால் மறுக்கமுடியவில்லை. பெயர்குறிப்பிடப்படாத இந்திய பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் இப்பேரத்தில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது மேற்கோள் செய்து காட்டப்பட்டுள்ளது, பாதுகாப்புத்துறை அமைச்சரின் டிசம்பர் 7 முதல் 10ம் தேதி வரையிலான அமெரிக்கப் பயணத்தின்போது இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது என டிசம்பர் 26ம் தேதிய சென்னை சார்ந்த ஹிந்து செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியா அதன் இராணுவ வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வதற்கு வெளிப்படையாக ஒப்புதல் அளிப்பதன் பிரம்மாண்டமான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டும் ஒரு அறிக்கையில், புது டெல்லி அமெரிக்கா உடனான இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு மீதான ஒப்பந்தத்தை விரைவில் அடைத்துவிடுவதில் எந்தவொரு கடுமையான தடையையும் சந்திக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் பார்ப்பதாக ஹிந்து செய்தி மேலும் கூறியது. "ஒரே ஒரு கவலை மட்டுமே உள்ளது" என்று அவர் பின்னர் அறிவித்தார். "போர் நிகழ்ந்தால் என்ன நடக்கும்?

அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு ஒருவேளை இந்தியா ஒத்துழைக்காமல் இருந்திருந்தால் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு எப்படி பிரயோகிக்கப்படும் என்பதற்கான "விளக்கங்களை" இந்தியா அறிய முயல்வதாக அதிகாரி கூறினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புத் தன்மை பற்றி ஒருவேளை அவர் நினைத்ததைவிட அதிகமாக இருக்கலாம் என்றார், "நட்பு நாடுகளுடன் போருக்கான ஆதரவை நீட்டிக்க" சட்டபூர்வமாக கடமைப்பட்டிருக்க புது டெல்லி விரும்பவில்லை எனவும் அந்த பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி தெரிவித்தார்.

போர் நிகழுமானால் LSA விதிமுறைகளில் எவ்வித இடைநீக்கம் அல்லது திருத்தம் செய்யப்படாமல் அப்படியே மாற்றம் இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்தியா எனவும் மொழி விதிகளை உட்படுத்துவதன் மூலம் ஒரு "சமரசம்" காண வழிகாணலாம் எனவும் ஆலோசனை கூறினார்.

இம்மாதிரியான மொழியை உட்சேர்ப்பது என்பது இந்தியா "மூலோபாய சுயாட்சி" எனும் பாசாங்கினை பேணிவரும் அதேவேளையில் சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் மூலோபாய தாக்குதல்களில் இந்தியா தன்னை இன்னும் முழுமையாக ஒருங்கிணைத்துக் கொள்ளும் வகையில் இந்தியாவின் கொள்கையை கடைபிடிக்கும் வழியில் உள்ளது.

இது அமெரிக்கா உடனான இராணுவ-பாதுகாப்பு கூட்டினை மேம்படுத்துதல் குறித்த உள்நாட்டு எதிர்ப்பினை எதிர்கொள்ள உதவும். இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரிடையே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பரந்த விரோதப் போக்கு உள்ளது, அவர்கள் இதை போர் மற்றும் அடக்குமுறைகளுடன் சரியாக அடையாளம் கண்டு வைத்துள்ளனர். சீனா உடனான இந்தியாவின் உறவுகளில் ஏற்படும் தாக்கம் மற்றும் இந்தியாவை கடுமையாக மிரட்டுவது மற்றும் அச்சுறுத்துவது போன்ற நீண்டகால வரலாற்றை அமெரிக்கா கொண்டிருப்பது போன்ற இரண்டு காரணங்களினால் இந்திய அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்தின் பிரிவுகள் தங்களது சொந்தக் காரணங்களால் வாஷிங்டன் உடன் மிக நெருக்கமாக பிணைந்து செல்வதை எதிர்க்கின்றன.

அமெரிக்கா அதன் பங்கிற்கு, இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்க ஆர்வமாக உள்ளது, மேலும் இந்திய இராணுவத்தினை அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் ஆயுத முறைகளை சார்ந்திருக்க செய்வது உட்பட பென்டகனுடன் எப்போதும் நெருங்கிய கூட்டை இந்திய இராணுவம் நிலையாகப் பெற்றுக்கொள்ளும் வகையிலான அமெரிக்காவின் நீண்டகால மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமெரிக்கா இதனை பார்க்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு ஒரு பென்டகன் அதிகாரி அளித்த பேட்டியில், பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பது குறித்து வாஷிங்டன் மகிழ்ச்சியுற்று இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். "பாரிக்கர் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டில் கையெழுத்திட வெளிப்படையாக இணக்கத்தை காட்டியுள்ளார்", மேலும் இந்தியாவுடன் ஒரு முழு இராணுவக் கூட்டினை மேம்படுத்துவதில் அமெரிக்கா "அடித்தளமாக" கருதும் இரண்டு தொடர்புள்ள ஒப்பந்தங்கள் "பின்தொடரும்" என்று அமெரிக்கா "நம்பிக்கை" வைத்துள்ளதாக எக்ஸ்பிரஸ் செய்தியானது அந்த அதிகாரியின் வார்த்தைகளின் சாரம்சத்தை வடித்துள்ளது.

மற்ற இரண்டு "அடித்தளமான ஒப்பந்தங்கள்" ஆக தகவல் தொடர்புகளுடன் இணைந்து செயலாற்றுதல் மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த ஒப்பந்தம் (CISMOA) மற்றும் புவிசார் ஒத்துழைப்பிற்கேற்ற அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உடன்பாட்டு ஒப்பந்தம் (BECA) போன்றவை உள்ளன. இவ்வொப்பந்தங்கள் அமெரிக்க இராணுவக் கூட்டுக்களின் நிலைத்த அங்கங்களாக உள்ளன. இவை "தகவல் தொடர்புகளுடன் இணைந்து செயலாற்றுதல்" மற்றும் "பாதுகாப்பு" போன்ற உள்-இராணுவ வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் மேம்படுத்துவதற்காக என்று கருதப்படுகிறது.

அதே பாதுகாப்பு அதிகாரி ஹிந்துவுக்கு பேட்டியளித்திருப்பதன்படி, அவை "இந்தியாவின் மறைகுறியாக்கப்பட்ட அமைப்புக்களில் அமெரிக்காவின் அணுகுதலை அனுமதிக்கும்", இந்த நிபந்தனை இந்திய ஆயுதப் படைகள் "உடன்பாடின்மைகள்" குரல் எழுப்பும் நிலைக்கு காரணமாக அமைந்துவிட்டது.

2006-2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.கே.ஆன்டனி, தகவல் தொடர்புகளுடன் இணைந்து செயலாற்றுதல் மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த ஒப்பந்தம் (CISMOA) மற்றும் புவிசார் ஒத்துழைப்பிற்கேற்ற அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உடன்பாட்டு ஒப்பந்தம் (BECA), அத்துடன் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு (LSA) போன்றவற்றை இறுதியில் எதிர்க்கத் தொடங்கினார், அதற்கு காரணம்

"இவ்வொப்பந்தங்களில் இடப்படும் கையெழுத்துக்கள், இந்திய இராணுவ நிறுவல்களில் அமெரிக்க இராணுவத்தின் வில்லங்கமில்லா அணுகுதலை அனுமதிக்கும் மற்றும் கூர் உணர்ச்சியுடைய தரவுகளில் சமரசத்தை ஏற்படுத்தும்" என அவர் நம்புவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.

இவற்றிலிருந்து தனியாக, இந்திய-அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சி (DTTI) யின் கீழ், பென்டகன் மற்றும் அமெரிக்க ஆயுத தயாரிப்பாளர்கள் உடனான இணை தயாரிப்பு மற்றும் இணை அபிவிருத்தி திட்டங்களில் நுழைய இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.

இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் அவர்களது இந்திய சமதரப்பினரிடம் CISMOA மற்றும் BECA வின் விதிமுறைகளை இந்தியா ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அது "ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்" உயர் தொழில்நுட்ப ஆயுத முறைகளின் இணை தயாரிப்பு மற்றும் இணை அபிவிருத்தி விரிவாக்கத்திற்கு ஒரு தடையாக இருக்கும் என்பது நிரூபணமாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசின்கீழ், அமெரிக்காவின் ஒரு "பூகோள மூலோபாய கூட்டாளி" ஆக இந்தியா மாறியதுடன் பென்டகனின் கூட்டு பயிற்சிகளில் இந்திய இராணுவம் அடிக்கடி பங்காளியாக மாறியது, மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக ரஷ்யாவிற்கு பதிலாக அமெரிக்கா இடம்பெயர்ந்தது.

பா.ஜ.க.வின் 20 மாதகால ஆட்சி, அமெரிக்காவின் மிக முக்கியமான இந்திய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனான இராணுவ-பாதுகாப்பு பிணைப்புக்களை உருவாக்குவது உட்பட, இந்தியாவை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் வாஷிங்டன்னை நோக்கி சாய்த்துவிட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ஆண்டு குடியரசு தினவிழாக் கொண்டாட்டங்களில் மரியாதைக்குரிய விருந்தினராக பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என ஆக்கினார். ஜனவரி 2015ல் ஒபாமாவின் டெல்லி வருகையின் முடிவின்போது, தென் சீனக் கடல் பகுதிகளில் அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகள் மற்றும் சீனாவிற்கு இடையேயான மோதல்கள் குறித்த அமெரிக்காவின் வரைவு உட்பட வாஷிங்டனின் மகிழ்ச்சிக்கு ஏற்ப "ஆசிய-பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் குறித்த அமெரிக்க-இந்திய கூட்டு மூலோபாய நோக்கு" பற்றி அவரும் மோடியும் அறிவித்தனர்.

செப்டம்பர் மாதத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அவரின் அமெரிக்க சமதரப்பினரான ஜோன் கெர்ரியும், ஐ.நா.வின் அமைதிகாக்கும் இயக்கங்களில் பங்கேற்க வந்திருக்கும் ஆபிரிக்க துருப்புக்களுக்கு "பயிற்சி மீது கவனம்" என்பதுடன் "அமைதிகாக்கும் திறன்வளர்ப்பு"க்கு அமெரிக்க மற்றும் இந்திய இராணுவங்கள் ஒத்துழைக்கும் என அறிவித்தனர். பேரழிவு நிவாரணங்கள் வழங்குவதில் இந்திய மற்றும் அமெரிக்க இராணுவங்களுக்கு இடையே தற்காலிக ஒத்துழைப்பு கடந்தகாலத்தில் இருந்தபோதும், ஒரு வெளிநாட்டு இராணுவ நடவடிக்கையில் முதல் முறையாக அவர்கள் இணையவிருப்பதாகவும், ஏகாதிபத்திய ஆதரவுபெற்ற ஐ.நா. அமைதிகாக்கும் இயக்கங்களில் இணைந்து பணியாற்றி அமெரிக்க-இந்திய இராணுவங்களை கண்காணிப்பு மற்றும் ஆயுதப்படைகளை ஈடுபடுத்துதல் போன்றவற்றில் பயன்படுத்திட இராணுவ படையினரை வழக்கப்படுத்தவேண்டும் என இந்த ஒப்பந்தம் பரிந்துரைக்கிறது.

முத்தரப்பு இந்திய-அமெரிக்க-ஜப்பானிய இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பினை மோடி அரசாங்கம் தழுவியிருத்தல் என்பது குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது, அதிலிருந்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், சீனாவின் பலத்த எதிர்ப்பிற்குப் பின்னர் பின்வாங்கிவிட்டது.

கடந்த செப்டம்பரில், அமெரிக்க-ஜப்பான்-இந்திய முத்தரப்பு அமைச்சர்களுக்கான பேச்சுவார்த்தையின் ஆரம்ப கூட்டத்தில் கெர்ரி மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷிடாவையும் சுஷ்மா சுவராஜ் சந்தித்தார். அதன்பின்னர் விரைவிலேயே, வருடாந்திர இந்தோ-அமெரிக்க "மலபார்" கடற்படை பயிற்சியில் மூன்றாவது நிரந்தர உறுப்பினராக ஜப்பான் இனிமேல் இருக்கும் என்பது வெளிப்பட்டது.

2008க்குப் பின்னர் அமெரிக்காவிற்கு பாரிக்கரின் பயணம் ஒரு முதலாவது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் பயணமாக இருந்தது. அதே காலகட்டத்தில், அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் இந்தியாவிற்கு ஆறு முறை பயணம் மேற்கொண்டிருந்தார், சீனாவுக்கு எதிரான பென்டகனின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் போர் திட்டமிடல்களில் இந்தியாவை ஒருங்கிணைக்க முனைவதற்கான குறியீடாகவே இது இருந்தது.

ஹவாயில் அமெரிக்க பசிபிக் படைத் தளத்தினை (PACOM) பார்வையிடுவதன் மூலம் பாரிக்கர் தனது அமெரிக்க பயணத்தினை தொடங்கியது, இரு நாடுகளுக்கிடையிலான இராணுவ-பாதுகாப்பு கூட்டுக்களை வலுப்படுத்துவதையே குறித்துக்காட்டியது. அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் ஆஷ்டன் கார்ட்டெர் தலைமையில், அமெரிக்காவின் அணு சக்தியில் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான யுஎஸ்எஸ் டிவைட் டி. ஐசனோவாவிற்கு பாரிக்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, இதுவரை யாரும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுக்கு பயணம் செய்யாத நிலையில், முதலாவது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக அவர் பயணம் மேற்கொண்டார் என ஆகியது.

இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அல்லது சி.பி.எம்., இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு மற்றும் இது தொடர்பான இரண்டு இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மீது அமெரிக்கா உடனான பா.ஜ.க.வின் பேரங்கள் குறித்து கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினருடன் முற்றிலும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒரு கட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்தியாவின் மூலோபாயக் கூட்டினை வடிவமைப்பது உட்பட. நான்கு ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு சி.பி.எம் உற்ற தூணாக இருந்தது. உழைக்கும் வர்க்கத்தினர் தலைமையில் ஏகாதிபத்தியம் மற்றும் ஏகாதிபத்தியப் போர் குறித்த புரட்சிகரமான எதிர்ப்பை வளர்க்கும் போராட்டங்களின் ஒரு அங்கமாக இல்லாமல், இந்திய ஆளும் மேற்தட்டுக்களின் தேசிய நலன்கள் குறித்த நிலைப்பாட்டில் இருந்துகொண்டு இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டினை சி.பி.எம். எதிர்க்கிறது. "இந்தியாவின் இறையாண்மையை கட்டுப்படுத்தக்கூடிய, அதன் மூலோபாய சுயாட்சியை முடக்கக்கூடிய மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு இந்தியாவை ஒரு துணை இராணுவ கூட்டாக உருவாக்கும் வகையிலான இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் என சி.பி.எம். இன் அங்கமான மக்கள் ஜனநாயகம் பா.ஜ.க. அரசாங்கத்தை வலியுறுத்துவதாக சமீபத்திய கட்டுரை ஒன்று தெரிவிக்கின்றது.

இதே போக்கில், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முற்போக்கான எதிர் சக்தியாக இந்திய முதலாளித்துவம், ஐ.நா. மற்றும் ஒரு "பல்முனை உலகு" பணியாற்றிடமுடியும் என்று பிற்போக்குத் தனமான மாயையை சி.பி.எம். ஊக்குவிக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com