Sunday, January 31, 2016

சிங்கத்தின் வாலில் ஏறி விட்டீர்கள். இனி துண்டு துண்டுதான். ராஜபக்சவின் மூன்றாம் மகன் எச்சரிக்கை.


முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் மகன் லெப்டினன் யோசித்த ராஜபச்ச நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ராஜபக்சவின் முன்றாம் மகன் றோஹித்த ராஜபக்க தனது முகநூலினூடாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவ் எச்சரிக்கையில் :

'நல்லாட்சி அரசு சிங்கத்தின் வாலில் ஏறிவிட்டதாகவும், தற்போது சிங்கம் உங்களை துண்டு துண்டாக கிழித்தெறியாது என எதிர்பார்க்க வேண்டாம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இதேநேரம் தம்மை பழிவாங்கவே யோசித்த கைது செய்யப்பட்டதாக முன்னாள் அதிபர் மகிந்த தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனும் அரசாங்கத்துக்கு பக்கபலமாகவே இருப்பதாக, சாடியுள்ள அவர் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய ஒருவரே தற்போது எதிர்கட்சித் தலைவராக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜே வி பியும் அரசாங்கத்தை விமர்சிப்பதைப் போன்று அரசாங்கத்தின் பக்கமே இருக்கிறது என்றும் ஜே வி பி கேள்வி எழுப்பும் போது, அரசாங்கம் அதற்கு பதில் வழங்குவது போன்ற திட்டமிட்ட நடைமுறையொன்றை செயற்படுத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்:

யோசித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமையானது, தம்மை பழிவாங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட செயலென்பது நான்காம் திகதிக்கு முன்னர் இரண்டு ராஜபக்ஷவினரை கைது செய்யவிருப்பதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன போன்றோர் கூறியதிலிருந்து தெளிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் எத்தனை கைதுகளை மேற்கொண்டாலும் ராஜபக்ஷக்களின் பயணத்தினை நிறுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தளையில் இடம்பெற்ற கூட்டமொன்று மற்றும் யோசித்த ராஜபக்சவை சிறையில் பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com