Sunday, December 6, 2015

அரசியல் எதிர்காலத்தை டக்ளஸ் கையில் ஒப்படைத்தார் மண்டையன் குழு சிறிதரன். வீடியோ

இந்திய இராணுவம் இலங்கையில் குடிகொண்டிருந்த காலத்தில் குடாநாட்டில் இடம்பெற்ற எண்ணற்ற கொலைகளுக்கு அதிபதிகளான மண்டையன் குழுவின் உறுப்பினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் நுழைந்தவர் சிறிதரன். அண்மையில் ஐ.நா வில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட போர்குற்ற பிரேணையில் சிறிதரன் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உதவினார் என்ற போர்குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் 04.12.2015 அன்று பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதங்களின்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பிருமான டக்ளஸ் தேவானந்தா, பா.உ சிறிதரன் கிளிநொச்சியில் ஆசிரியராக மற்றும் அதிபராக கடமையாற்றிய காலகட்டங்களில் வன்னியின் சிறார்களை புலிகளமைப்புக்கு பலவந்தமாக பிடித்து கொடுத்தது மாத்திரமன்றி அச்சிறார்களை மீண்டும் புலிகளிடமிருந்து மீட்டுத்தருவதாக சிறார்களின் பெற்றோரிடம் கப்பம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

பா.உ.டுக்ளஸ் தேவானந்தாவின் மேற்படி குற்றச்சாட்டுக்களை மறுத்துரைத்துள்ள பா.உ சிறிதரன், தான் அவ்வாறு சிறார்களை புலிகளமைப்புக்கு பலவந்தமாக இணைத்ததாக நிரூபித்தால் தனது அரசியல் வாழ்விலிருந்து முற்றாக ஒதுங்க தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சிறிதரன் மீதான ஐநா வின் குற்றச்சாட்டுக்கு இலங்கைப்பாராளுன்றில் வலுச்சேர்த்த பா.உ டக்ளஸ் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோரின் சாட்சியங்களை ஒருங்கிணைத்து சிறிதரன் மேற்படி கொடிய குற்றத்தினை புரிந்தான் என நிரூபிப்பாரா?

அவ்வாறு நிரூபிக்கப்பட்டாலும் தமிழ் மக்களில் பெயரால் பாராளுமன்ற சுகபோகங்களை அனுபவிதத்து பழக்கப்பட்டுள்ள சிறிதரன் அரசியலிலிருந்து இலகுவில் வெளியேறிவிடுவாரா?

மேலும் வன்னிலே புலிகளுக்கு சிறார்களை பலவந்தமாக பிடித்து கொடுத்த சிறிதரன் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது தான் பிடித்துக்கொடுத்த சிறார்கள் மாண்டு கொண்டிருக்கையில் வன்னியிலிருந்து கொழுப்புக்கு தப்பி சென்று சுகபோக வாழ்கை வாழ்ந்து கொண்டிருந்ததாகவும் பா.உ டக்ளஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com