Friday, December 18, 2015

சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களின் தியாகத்தை நம்மவர்களாலும் செய்ய முடியுமா?

காணமல் போனதாக தேடப்படுகின்ற ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள சில இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி இராணுவ வீரர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டால் குறிப்பிட்ட இராணுவ அதிகாரிகளின் குடும்ப அங்கத்தவர்கள் அநாதராவாக்கப்பட்டுள்ளதாக உணரும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்குடும்பங்களுக்கு தமது சம்பளங்களை தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் மாதம் முதல் தங்களது சம்பளங்களை குறித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டில் போரை இல்லாமல் செ;யய புலனாய்வுப் பிரிவினர் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

அன்று மிலேனியம் சிட்டி சம்பவ காட்டிக் கொடுப்பினால் 97 புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களில் சிலரும் இதில் அடங்குகின்றனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையிலேயே குறித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பது நகைப்பிற்குரியது.

இவ்வாறு வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் மனித வேட்டை நிறுத்தப்படும் வரையில் நாம் போராடுவோம்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் சுருட்டிக்கொண்டு வடகிழக்கிலிருந்து 16 ஆசனங்களை பெற்று பாராளுமன்று சென்றுள்ள உறுப்பினர்கள் இதுவரை தமிழ் மக்களுக்கு செய்தது யாதெனக்கேட்டால்? மக்களின் இரத்தத்தை கொதிப்படைய செய்து இனவாத வெறியையூட்டி வாக்குகளை பெற்று அதனூடாக கிடைக்கும் வரப்பிரசாதங்களை தங்களது குடும்பங்களுடன் பகிர்ந்து கொண்டதை தவிர ஏதுமில்லை என்று அச்சமறக்கூறமுடியும்.

இந்நிலையிலேயே இந்நாட்டில் அமைதியை கொண்டுவர போராடிய இராணுவ வீரர்களது குடும்பங்கள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றார்கள் என்றபோது அவர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தமது சம்பளத்தை தியாகம் செய்ய முன்வந்துள்ளனர்.

ஆனால் இன்றும் வன்னியில் மக்கள்படும் அவலங்களை பிச்சைகாரன் புண்ணாக வைத்து அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகள் மேற்படி சிங்கள அரசியல் தலைவர்களை முன்னுதாரணமாக கொண்டு முழுச்சம்பளத்தையும் வழங்காவிட்டாலும் ஒரு தொகையையாவது தியாகம் செய்து ஒரு தொகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்காகவேனும் உதவ முன்வருவார்களா?

16 பராளுமன்ற உறுப்பினர்களும் மாதாந்தம் 25000 ரூபா பணத்தினை ஒருக்கினால் மாதமொன்றுக்கு நான்கு குடும்பங்களுக்கு சுயதொழிலை ஆரம்பிக்க உதவ முடியும்.

இவ்வாறான உதவியை வேண்டி நிற்கும் நபர்களின் அவலங்களை இங்குள்ள இணைப்பை சொடுக்கி அறிந்து கொள்ள முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com