Saturday, November 21, 2015

பயங்கரவாதிகளை அரசியல் கைதிகள் என்ற போர்வையில் விடுதலை செய்ய முடியாது. சம்பிக்க

குற்­ற­வா­ளிகள் என நிரூபிக்­கப்­பட்ட விடு­த­லைப்­புலி கைதி­களை யார் விடு­வித்­தாலும் அது பாரிய குற்­ற­மாகும். எக்­கா­ர­ணத்தை கொண்டும் தமிழ்க் கைதி­களை அர­சாங்கம் விடு­விக்கக் கூடாது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். புலி­க­ளுக்­காக ஆத­ரவுக் குரல் எழுப்பும் தமிழ் தலை­மைகள் ஏன் கே.பி, ருத்­ர­கு­மாரன், பிள்­ளையான், கருணா விட­யத்தில் அமைதி காக்­கின்­றனர் எனவும் அவர் கேள்வி எழுப்­பினார்.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் தமிழர் அர­சியல் தரப்­பினர் அதிக அக்­கறை காட்­டி­வரும் நிலையில் அது தொடர்பில் வின­வியபோதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த யுத்த கால­கட்­டத்தில் விடு­தலைப் புலி­க­ளுடன் நேர­டி­யான தொடர்­பு­களை வைத்­தி­ருந்த அதேபோல் புலி­களின் ஆயுத போராட்­டத்­திற்கு ஆத­ர­வாக செயற்­பட்ட பலரை முன்­னைய அர­சாங்கம் கைது செய்­தது. அதேபோல் விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வாத குழுவில் போரா­டிய பல்­லா­யி­ரக்­க­ணக்­கி­லான உறுப்­பி­னர்கள் கடந்த காலத்தில் புனர்­வாழ்வு நட­வ­டிக்­கை­களின் மூலம் விடு­த­லையும் செய்­யப்­பட்­டுள்­ள னர். அதேசந்­தர்ப்­பத்தில் புலி­களின் நேரடி தொடர்பில் இருந்த சிலரே இன்றும் தடுப்­புக்­கா­வலில் உள்­ளனர். இவர்கள் தொடர்பில் உயர்நீதி­மன்ற தீர்ப்­பு வழங்­கியுள்ளது. அவ்­வா­றான நிலையில் ஏதேனும் கார­ணங்­களை காட்டி அவர்­களை விடு­விக்க முயற்­சிப்­பது கண்­டிக்­கத்­தக்க விட­ய­மாகும்.

புலிகள் என்ற சந்­தே­கத்தின் பேரில் தடுப்­புக்­கா­வலில் உள்ள தமிழ்க் கைதி­களை நான் சுட்­டிக்­காட்­ட­வில்லை. குற்றம் இல்­லாத அனை­வரும் விடு­விக்­கப்­பட வேண்டும். அதில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்­துக்­க­ளுக்கும் இட­மில்லை. யுத்­தத்தின் போது சந்­தே­கத்தின் பேரில் கைதுசெய்­யப்­பட்ட தமிழ்க் கைதி­களை விடு­விக்க அர­சாங்கம் எடுக்கும் நட­வ­டிக்­கை­களை நானும் வர­வேற்­கின்றேன். ஆனால் அப்­பாவி தமிழ்க் கைதிகள் என்ற பெயரில் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள அனைத்து தமிழ்க் கைதி­க­ளையும் விடு­விக்க முயற்­சிப்­பதை நாம் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். இந்த விட­யத்தில் புலிகள் எனக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள, நீதி­மன்­றத்தின் மூலம் நிரூ­பிக்­கப்­பட்­டுள்ள தமிழ்க் கைதி­களை விடு­விக்கும் நட­வ­டிக்­கையை யார் மேற்­கொண்­டாலும் அது தவ­றான விட­ய­மாகும்.

புலி­களை விடு­விக்கும் நட­வ­டிக்­கை­களை எந்த அர­சாங்கம் மேற்­கொண்­டாலும் அது பார­தூ­ர­மான குற்­ற­மாகும். இந்த ஆட்­சியில் நல்­லாட்சி உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட போதிலும் சட்ட திட்­டங்­களை மதிக்­கவும், நீதி­மன்ற தீர்ப்­பு­களை பின்­பற்­றவும் வேண்­டிய கட்­டாய தேவையுள்­ளது.

அதேபோல் புலி­களை விடு­விக்­கக்கோரி இன்று பலர் ஆத­ரவுக் குரல் எழுப்­பு­கின்­றனர். அவர்­களை நிர­ப­ரா­திகள் என்று விமர்­சிக்­கின்­றனர். இவர்­களின் செயற்பா­டு­க­ளினால் இன்று பலர் விடு­விக்­கப்­பட்டும் உள்­ளனர். அவ்­வாறு கைதுசெய்­யப்­பட்டு சிறை­களில் உள்ள கைதிகளின் விடு தலைக்காக செயற்படுவோர் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான கே.பி, பிள்ளையான், கருணா போன்றோரைத் தண்டிக்க ஏன் வலியுறுத்த தவறுகின்றனர்? ஆகவே திட்டமிட்டு இவர்கள் செய்யும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் துணை போகக் கூடாது என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com