Friday, November 20, 2015

ஐ.தே.க ஆட்சிக்காலத்தில் கறுப்பு வான்களிலா ஆட்களை கடத்தினார்கள்? கோட்டா கேள்வி

கடந்த காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற வெள்ளை வேன் ஆட்கடத்தில்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச விடம் சிங்கள நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பிபோது மேற்படி கேள்வியை தொடுத்துள்ளார்.

கேள்விக்கு பதிலளிக்கையில், குற்றவாளிகளே இவ்வான வான்களில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனக்குறிப்பிட்டுள்ள அவர் 88ம் 89ம் ஆண்டுகளில் கறுப்பு வான்களை பயன்படுத்தியா கடத்தினர் எனக் கேட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள், குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களை பிடிக்க புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்தப்பட்ட வானையே வெள்ளை வான் என்கின்றனர்.

இதற்கு முன்னர் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு செயற்படவில்லையா?. ஜே.வி.பியின் காலத்தில் கறுப்பு வான்களிலா இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டனர்?. இதனை அனைவரும் மறந்து விட்டனர்.

எவர் மீதாவது சேறுபூச வேண்டுமாயின் எதனையாவது அடிப்படையாக கொண்டு கதைகளை புனைவார்கள். இது மிகவும் தவறானது. எமது சமூகம் அனைத்தும் சிறந்த நியாயமான சமூகமல்ல. சகல காலங்களிலும் தவறுகள் நடந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலரின் இப்பதிலானது அவரது பொறுப்புக்கூறலை எடுத்தியப்புகின்றது. தவறுகளை புரிந்தோர் தாங்கள் எவ்வித தவறும் புரியாத பரிசுத்தவான்கள் என முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் செயலை செய்கின்றபோது நடந்தவற்றை நடந்ததாகவும் அவற்றுக்கான தனது தரப்பு நியாயங்களை நிமிர்ந்து நின்று சொல்வதற்கு தயக்கம்காட்டாமையும் இங்கு புலனாகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com