Thursday, November 19, 2015

பாரிஸ் தாக்குதலின் பிரதான பயங்கரவாதி கொல்லப்பட்டான்.

கடந்த 13.11 அன்று பாரிஸில் இடம்பெற்ற 6 தாக்குதலில் சுமார் 129 பேர் கொல்லப்பட்டு 352 காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலை திட்டமிட்டு தலைமை தாங்கியவன் எனச் சந்தேகிக்கப்பட்ட பெல்ஜிய பிரஜாவுரிமையுடைய அப்தல்ஹமிட் அபவுட் என்பவன் கொல்லப்பட்டுள்ளதாக பாரிஸ் வழக்குதொடுனர்கள் அறிக்கை ஒன்றினூடாக தெரியப்படுத்தியுள்ளனர்.

பாரிஸில் மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பிரதேசத்திற்கு மிகவும் அருகாமையாகவுள்ள, சன செருக்கடியானதும் மத்தியதர மற்றும் குடியேறிகள் வாழுகின்றதுமான பிரதேசமொன்றில் பயங்கரவாதிகள் ஒழிந்திருந்து அடுத்த தாக்குதலுக்கான திட்டத்தை வகுக்கின்றனர் என்பதை பிராண்ஸ் புலனாய்வுத்துறையினர் மோப்பம் பிடித்துள்ளனர்.

ஜீன் மைக்கல் என்ற அதிகாரியின் தலைமையில் விசேட பயிற்றப்பட்ட சுமார் நூறிற்கு மேற்பட்ட பொலிஸார் குறித்த குடியிருப்பை நேற்று 17.11.15 அதிகாலை சுமார் 4.16 மணியளவில் நெருங்கியபோது, எதிர்பார்த்ததை விட அனுபவம் கசப்பானதாகவே அமைந்திருக்கின்றது. குடியிருப்பொன்றின் மூன்றாம் மாடியிலுள்ள வீட்டின் கதவை வெடிவைத்து தகர்த்துக்கொண்டு உள்ளே நுழைய பொலிஸார் முயற்சித்துள்ளனர். ஆனால் வெடிகுண்டுக்கு கதவு திறக்க மறுத்ததை அடுத்து உள்ளேயிருந்த பயங்கரவாதிகள் பாரிய உபகரணங்களை கொண்டு மேலும் கதவை அடைத்துக்கொண்டுள்ளனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பொலிஸாரால் உள்ளே நுழைய முடிந்தபோது அங்கிருந்த பெண் பயங்கரவாதி ஒருத்தி பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவாறு தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் சில பொஸிலார் காயமுற்றதுடன் 7 வயதுடைய டீசல் என்ற மோப்ப நாய் ஒன்றும் உயிரிழந்துள்ளது.

குடிமனையிலிருந்த பயங்கரவாதிகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற 7 மணிநேர துப்பாக்கி சண்டையின் பின்னர் ஒரு பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் வெடித்து சிதறிய பெண் பயங்கரவாதியுடன் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 என பொலிஸார் ஊர்ஜிதம் செய்திருந்தனர்.

கொல்லப்பட்ட இரண்டாமவர் தக்குதலின் பிரதானி என அறிவிக்கப்பட்டுள்ளது. இவன் பொலிஸாரின் தாக்கதலில் கொல்லப்பட்டானா அன்றில் தன்னைத் தானே சுட்டுகொன்றானா என்பது இதுவரை தெளிவில்லை என ஐரோப்பிய நாடொன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வு அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் க்கு தெரிவித்துள்ளார்.

குறித்த வீடு இனம்காணப்படுவதற்கு கடந்த 13.11 திகதி தாக்குதலுக்கு உள்ளான தியேட்டருக்கு அருகாமையில் குப்பை தொட்டியொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேயிலிருந்து மீட்கப்பட்ட தகவல்களே பிரதானமாக அமைந்ததாக தெரியவருகின்றது. குறித்த தொலைபேசியிருந்து தாக்குதல் ஆரம்பித்த மறுகணத்தில் ஒரு குறுச்செய்தி அனுப்பப்பட்டிருக்கின்றது. அச்செய்தியில் " முன்னேறுங்கள். நாங்கள் ஆரம்பிக்கின்றோம்" “Let’s go, we’re starting.” என்று சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த தியேட்டரை அடைவதற்கான வரைபடமும் காணப்பட்டுள்ளது.

27 வயதான அப்தல்ஹமிட் அபவுட் பெல்ஜியத்தில் தனது பாடசாலைக் கல்வியை முடித்துள்ளான். இவன் கடந்த 2013 ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் இற்காக ஜிஹாட் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதுடன் தனது 13 வயது சகோதரனையும் இணைத்துக்கொண்டதாகவும் அச்சிறுவனை கொண்டு ஐஎஸ்ஐஎஸ் ற்கான பிரச்சாரங்களுக்கு உதவியதாகவும் விமர்சனத்திற்குள்ளாகியள்ளான்.

ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பலவற்றை திட்டமிட்டவன் இவனே என பொலிஸாரால் இவன் தேடப்பட்டு வந்தவன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த அபவுட், பெல்ஜியம் நாட்டு குடிமகனாவான். இங்கிருந்தபடியே சிரியாவுக்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதப் பாசறையில் பயிற்சி பெற்ற இவன், பாரிஸ் தாக்குதலின்போது மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறிய பிராஹிம் அப்டெசலாம் என்பவனுடனும், இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றும் தேடப்பட்டு வரும் பலருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக பிரான்ஸ் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அப்டெல்ஹமித் அபவுட்-டும், பாரிஸ் தாக்குதலில் பலியான பிராஹிம் அப்டெசலாம் என்பவனும் பெல்ஜியம் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த மாலென்பீக் பகுதியில் ஒன்றாக வசித்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முஹம்மது நபியை இழிவுப்படுத்தும் வகையில் கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பின்னர் பிரான்ஸ் போலீசாரை கொல்ல திட்டமிட்டபோது இவர்களின் பதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் சிரியாவுக்கு தப்பிச்சென்ற அப்டெல்ஹமித் அபவுட், அங்கிருந்தபடியே பாரிசில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதலுக்கு திட்டம்தீட்டி தந்துள்ளான். பெல்ஜியம் நாட்டில் இவன் மீதான தீவிரவாத வழக்குகளின் அடிப்படையில், தலைமறைவாக இருக்கும் இவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரிசில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளின் உடல்களை மருத்துவ பரிசோதனை செய்த போது முக்கிய குற்றவாளியான அபாவுத் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளதாக பிரான்சு அரசு வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.



குறித்த பயங்கரவாதி கொலைசெய்த சடலங்களை புதைப்பதற்காக வெகு சந்தோஷமாக எடுத்துச்செல்லும் வீடியோ ஒன்றை இங்கு காணலாம்.



ஐ.எஸ் தீவிரவாதிகளை விட கொடூரமானவர்கள் யார் தெரியுமா?

அண்மையில் நடந்த பாரிஸ் தாக்குதலை அடுத்து சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிக பயங்கரமான அமைப்பாக ஆப்பிரிக்காவின் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு உருவெடுத்துள்ளது. போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மற்றும் அதன் அண்டை நாடுகளை பல வருடங்களாக துன்புறுத்தி வருகிறது.

இந்த நிலையில், நைஜீரியாவின் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை விடவும் பயங்கரமானது என்று உலகப் பயங்கரவாத குறியீடு தரவு ஒன்று தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் சென்ற ஆண்டு மட்டும் உலகின் பல்வேறு இடங்களில் 6,073 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், அதே நேரம் போகோ ஹராம் நடத்திய தாக்குதல்களினால் 6,664 பேர் பலியாகியுள்ளனர். உலகில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களில் பாதியளவிற்கு மேல் போகோ ஹராம், ஐ.எஸ். தீவிரவாதிகளால்தான் நடத்தப்படுகிறது. இந்த தகவலை இன்ஸ்டிடியூட் ஆப் இக்கனாமிக்ஸ் அன்ட் பீஸ் இன்று வெளியிட்டுள்ளது.

நேற்று கூட நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குலில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து நைஜீரிய மக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு அந்நாட்டு பிரதமர் முஹம்மது புகாரி அறிவுறுத்தியுள்ளார். அண்மையில், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை அந்நாடு துரிதப்படுத்தியிருந்த போதிலும் போகோ ஹராம் தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com