Friday, April 3, 2015

திருடியோடும் போது கூடச் சில்லறையும் தொலையவிடார்! லோகநாதன் - ஜேர்மனி

இலங்கைத் தமிழர்களின் புலம் பெயர்வு இலங்கைத் தமிழ் சாமான்யர்களுக்கு எந்த அனுகூலங்களையும் தரவில்லை. தம்மையும் தம் தனித்துவத்தையும் அழித்துக்கொள்ள மட்டுமே உதவியுள்ளது! இயக்கங்களுக்குப் பணம் சேர்த்தவர்கள், தூள் கடத்தல், ஆட்கடத்தல் என்ற 2ம் தர மோசடி வர்த்தகங்களில் ஈடுபாடு கொண்டு உழைத்த கறுப்புப் பணங்களை முதலீடாக்கி வர்த்தக நிலையங்கள் வைத்திருக்கும் சில புலம்பெயர் திருடர்கள் தொடர்ந்து தம்மைத் தக்க வைத்துக்கொள்ளவும் பணம் பண்ணவும் இந்தியப் பிரபலங்களைப் பாவிக்கிறார்கள். விளம்பரத்துக்கு தொலைக் காட்சிகளும் இவர்களுக்குத் தேவை. புலம் பெயர் புலிப் பினாமித் திருடர்கள் வாந்தியெடுத்தால் அதை வழித்து நக்குவதற்கென வைக்கோ சீமான், நெடுமாறன் என சில வகையறாக்கள் நாக்கைத் தொங்கப் போட்டு புலிக்கதை பேசி அலைகிறார்கள், அடிக்கடி விஜயம் செய்கிறார்கள்.

புலம்பெயர் தமிழர் விடும் தவறுகள் புலத்தில் வாழும் மக்களை எப்படிப் பாதிக்கின்றது என்பதை சுகிசிவம் சுட்டிக்காட்டி விமர்சித்தது போல் இவர்கள் யாரும் சுட்டிக்காட்டுவதில்லை பதிலாகத் தவறுகளை மேலும் தட்டிக்கொடுக்கிறார்கள். ஏனென்றால் தாம் வயிறு வளர்ப்பதற்கு! இது போல் நாமிருக்க முடியாது.

அதேவேளை தென் இந்தியச் சராசரி தமிழ் மக்கள் ஈழத் தமிழர்களை அவதானிக்கிறார்கள். தவறுகளைத் துல்லியமாகக் கணித்து வெறுக்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்! புதுக்கோட்டையிலுள்ள இலங்கைத் தமிழர் அகதி முகாமுக்குப் போயிருந்த போது அயலில் நான் சந்தித்த ஒரு குடும்பப் பெண்ணின் உரையாடல் இது . . . .

„உங்க சிலோண்காரப் பொம்பிளைங்க தண்ணி பிடிக்க வருவாங்க சார், குடங்கள முதவே குடிக்க உதவாத தண்ணியில அலசி எடுத்து வரமாட்டாங்க இங்க வந்து குழாய் தண்ணியில இல்ல லாறித் தண்ணியில அலசுவாங்க கொஞ்சம் கூட மனசில்லாதவங்க . . . . . .' என்றார் வெள்ளந்தித் தனமாக. இதுபோல ஐரோப்பா, கனடா, அமெரிக்காவிலிருந்து இந்தியா உலாவரும் இலங்கைத் தமிழரின் படாடோபங்களைப் பார்த்து முகம் சுழிக்கும் இந்திய மக்களிடம் அருவப்பான அன்னியப்பாடு தொனிக்குமே தவிர அனுதாபம் துளி கூட வராது.

என்றால், சுப்பர் சிங்கரில் திறமை மிக்க பிள்ளைகளை வஞ்சித்து! அவர்களின் நியாயமான வெல்லும் உரிமையை மறுத்து, கோடிக் கணக்கான வாக்குகளைப் அள்ளிப் போட்டு கனடிய இலங்கைத் தமிழ் அகதியான யசிக்காவை ஜெயிக்க வைத்த நிகழ்வு இலங்கைத் தமிழர் பற்றி எத்தகைய வெறுப்பையும் அருவருப்பையும் இத்தனை கோடி இந்தியத் தமிழர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் என எண்ணிப்பாருங்கள் தாக்கம் புரியும்?

தகுதிமிக்க நடுவர்களாகப் பணியாற்றிய சித்திரா, மனோ இவர்கள் கூட புலம் பெயர் இலங்கைத் தமிழர்களால் முகப்புத்தகங்களிலும் இணையங்களிலும் பண்பற்ற வார்த்தைகளால் அணுகியதும், வாக்களிப்பால் திறமைக்கான அவர்களது மதிப்பீடுகள் தரம் தாழ்ந்து போனதுமான வேதனை அவர்களிருவரதும் இறுதிநேர முகபாவங்களே காட்டி நின்றன.

அதோடு எமது மக்கள் எக்கேடு கெட்டு என்ன கெட்ட பெயர் வாங்கினாலும் சரி. லாபம் மட்டுமே குறியாக இருந்த ஏதையல ரிவி நிறுவனத்தினரால் யசிக்கா என்ற பிள்ளை பாவிக்கப்பட்டிருக்கிறாள். முதல் தெரிவில் தரமிழந்த போதும் மீண்டும் உட்கொண்டு வருவதற்கான 14 இலட்சம்;, இறுதிப் போட்டியில் ஒன்றரைக்கோடி(15000,000) எனத் தொலைபேசி வாக்குகள். இவை அத்தனையும் ஏதையல க்கு ஒரு குவியல் பணம்! பித்தளை கலந்து கொடுத்த ஒரு கிலோத் தங்கத்தை(விளம்பரத்)விடப் பல மடங்கு பெறுமதியான வருமானம். இதே வேளை ஈழத் தமிழர்கள் பற்றிய கேவலமான எண்ணக்கரு உலகம் பூராவும் விதைக்கப்பட்டது பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் சூட்டோடு சூடாக ஈழத் தமிழரிடம் உழைக்க கலைக் கழியாட்டத்துக்கு இன்று லண்டன் வந்திருக்கிறார்கள்?

இந்திய கலைத்துறை என்றால் சினிமா அதிலும் தென்னிந்திய சினிமா, திரைத் தொடர் நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள், உப விற்பனைகள் என்ற எண்ணக்கரு விதைக்கப்பட்டு நாளுக்கு நாள் இறுக்கமாகி வருகிறது. இது கூத்தாடித் தொழில் முதலாழிகள் தாமாகவே புலன் பெயர் தமிழர்களிடம் உருவாக்கிவிட்டிருக்கும் பாரிய-லாபமிக்க சந்தை. இந்தியாவில் எத்தனை மாநில மொழிகளில் சினிமாத் தொழிலும் கலைஞர்களும் இருந்த போதும் அடிக்கடி ஐரோப்பிய, கனடிய அரினா மண்டபங்கள் நிரம்பி வழியும் வருமானம் மிக்க கழியாட்டத் திருவிழாத் திருட்டை தென்னிந்திய கலைத்துறையால் மட்டுமே செய்ய முடிகிறது. காரணம் இலங்கைத் தமிழ் இழிச்ச வாயர்கள் பெறுமதி மிக்க பணமுலாவும் நாடுகளில் வாழ்வது.

அறம், நீதி, நேர்மை இவைகளைத் தள்ளி வைத்து இவைகளை ஏற்பவனைத் தண்டித்துக் கொன்று, பலாத்காரமாகக் குழந்தைகளை இழுத்து வந்து பயிற்சியே இல்லாமல் சுடுகலன்களைக் கையில் கொடுத்து அனுப்பியவனையும் தங்கள் தலைவனாக ஏற்றுப் போற்றிய வாத்துக் கூட்டமான ஈழத் தமிழர்கள் தானே? இசை நிகழ்ச்சியில் மட்டும் நீதியற்று வாக்களிக்கிறோம் சிறுவர் உரிமையை மீறுகிறோம் என்பதை எப்படி உணரமுடியும்? ஆண்ட பரம்பரை என்று சொல்வார்கள் முள்ளிவாய்கால் வரை தொடர்ந்து தோற்ற பரம்பரை! எதிலாவது வென்றுவிடவேண்டும் என்ற வேணவா! அதற்காக நேர்மையற்றாவது? என்பதன் விளைவாக விழுந்தது தான் யசிக்காவுக்கான வாக்கெண்ணிக்கை! இதை வாய்ப்பாக்கியது ஏதையலவுஏ.

„திருடாதே பாப்பா . . . . . . . . .'

தன்னுடைய நிகழ்ச்சி அட்டையின் அங்கீகாரமற்ற விற்பனையைத் தவிர்ப்பதற்காக இந்தப் பாடலை அடிக்கடி விளம்பரம் செய்கிறது ஏதையலவுஏ. ஆனால் மிகப்பெரிய திருடர்கள் இவர்கள் தான். இவர்களால் திருடப்படுபவை . .

• சுப்பர்சிங்கர் முதல் தேர்வில் சிறுவர்களின் எதிர்பார்ப்புகள்
• சரியான திறமையை வெளிப்படுத்தும் உரிமை
• கல்வி, கல்வி மீதான அக்கறை
• கல்வியில் காலவரையற்ற விடுப்பு(கல்யில் விடுப்பு உரிமை மீறலே)
• குழந்தைகளின் உழைப்பு
• எதிர்காலம் பற்றிய உண்மையற்ற எதிர்பார்ப்பு.

இப்படிப் பல விடயங்கள் குழந்தைகளிடமிருந்து திருடப்பட்டாலும் இலகுவான, செலவு குறைந்த, விளம்பரம் மிக்க நிகழ்ச்சி சுப்பர்சிங்கர் என்பதால் அதியுயர் வருமானம், விளம்பரங்கள் என அள்ளுகொள்ளை! குழந்தை தொழிலாரைக் கொண்டு உழைக்கும் தீப்பெட்டித் தொழில் போல இது சுருதிப்பெட்டித் தொழிலில் சிறுவர் உழைப்பு! சிறுவர்கள் சுரண்டப்படுகிறார்கள்!

• சினிமா, சினிமா, சினிமா என முழுமையும் அதுவாகவே! தமிழ் சினிமாவில் சமூகம் முன் செல்லவென வைக்கப்படும் அம்சம்? நூறாண்டாகியும் இன்றுவரை கேள்வியே தான்!

• சினிமாக் கலைஞர்களைத் தங்கள் வீட்டுப் பிள்ளைகளாக்கிப் போற்றுதலுக்குரிய அளவு முக்கியத்தும் கொடுக்கிறது ஏதையல ஏனோ?

• புறக்கணிக்கக் கூடிய சிறிய பிரச்சனைகளைப் பெரிது படுத்தல், சதா ஒட்டுக்கேட்டல், சாப்பாட்டில் விஷம் வைத்தல், கொலை, வில்லத்தனம் ஒருத்தி புருசனை ஒருத்தி பிடிக்கிறது இவைகளிலெல்லாம் அனேகம் பெண்களையே காட்டும் சின்னத்திரைத் தொடர்கதைகள் தேர்வு ஏதும் இன்றி ஒளிபரப்பிப் பெண்களைக் கேவலப்படுத்துகின்றது! . . . . .

அதோடு தொலைக் காட்சித் தொடர்கள் சினிமா மோகம் என்பன குடும்பப் பெண்களின் ஓய்வைத் திருவதோடு, குழந்தைகளை நேர்த்தியாகப் பராமரிக்க, வீட்டுப் பாடம், கல்விக்குதவுதல் போன்ற அனைத்துக் கடமைகளும் திருடப்படுகின்றன.

„ஒரு வார்த்தை ஒரு லட்சம்' வாரமொரு தமிழ் வளர்க்க „கனெக்ஸன்' னில் தினமும் தமிழ்ப் படுகொலை அரங்கேறுகிறது. தமிழ் நடிகர்களை மட்டுமே உள்வாங்கும் „நடுவிலகொஞ்சம் . . .' அவர்களின் தரத்துக்கான கேள்விகளின் மூலம் தமிழ் நடிகர்களின் அறிவுத்திறனை உலகறிய வைக்கிறது. „அது இது எது' அதிலும் சினிமாக் கலைஞர்களே! இது நோக்கமற்றிருப்பதோடு அது பேசும் வார்த்தைகள் பகிடிகள் பண்பு கடந்து போவது பல தடவைகள் நடந்திருக்கிறது.

படங்கள், சின்னத் திரைத் தொடர்கள், தினசரி நிகழ்சி பூராவும் சினிமாக் கலைஞர்களையே உள்வாங்கல் முலம் சினிமாக் கலைஞர்களின் அமைப்புக்களால் நடத்தப்பட்ட பெரு விழாக்கள், வெளிநாட்டுக் கழியாட்ட வருகைகள், விளம்பரங்கள் என ஒட்டுமொத்தமாகத் திருடிவிட்டது ஏதையல!.

சார்பு நிலையற்ற எந்த ஊடகமும் இருக்கமுடியாது. அந்த வகையில் ஏதையல யின் சார்பு மக்களை நோக்கியதல்ல. ஒரு நலவாழ்வு நிகழ்ச்சியோ, குறைந்த படசம் தினச் செய்தியோ கூடக் கிடையாது. „நீயா நானா' இது கூட மத்திய தர மேல் தட்டு மக்களின் பிரச்சனைகள் பிணக்குகளே தலைப்புகளாகவே தேடப்படுகிறது. ஆங்கிலம் கலந்தோ முழுமையும் ஆங்கிலத்திலோ பேசுவது மதிப்புகுரியதாக ஒரு பாணி பழக்கப் படுத்தப்பட்டதால் கீழ்த்தட்டு அனுபவங்கள் பங்கிடப்படுவது அரிதாகவேயுள்ளது.

எது எப்படியோ சுமைகள் மிகுந்த இன்றைய மனிதன் பொழுபோக்கு எனும் இருட்டுக்குள் அழைத்துத் திருடப்படுகிறான். இதைத் திறம்படச் செய்கிறது ஏதையல. எனவே „திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது . . . „ என்ற பாடல் வரியைப் பயன்படுத்தும் இவர்கள் தாமே திருந்துவார்களா? இல்லை! தவறு சிறிதாக இருக்கும் போதே நாம் இவர்களைத் திருத்த வேண்டும்.

தொலைக்காட்சி, அட்டைகள், கழியாட்ட நிகழ்வுகள், விளம்பரங்கள் புலம் பெயர் தமிழர்களிலேயே பெருமளவு தங்கி நிற்கும் இவர்களை முடக்கும் ஆயுதமும் நாமே! நாம் பகிஸ்கரித்தால்? சினிமா மோகம், தவறான வழி நடத்தல் என்பவற்றிலிருந்து சமூகத்தை காப்பாற்ற முடியும்! செய்வீர்களா? யசிக்கா மூலம் உழைத்து உருசி கண்டவர்கள் இனிவரும் ஒவ்வொரு சுப்சிங்கரிலும் புலம் பெயர் ஈழத் தமிழரை இடம் பெற வைப்பார்கள்.

ஓடியோடித் திருடுகிறார்களே தவிர திருடும் பணத்தில் சிறு துளி கூடநலப்பணிகளுக்காக ஏதையல செலவிட்டதாக அறியமுடியவில்லை.

(தொடர்)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com