Sunday, February 1, 2015

அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் 4 அல்-கொய்தா தீவிரவாதிகள் பலி!

ஏமனில் நேற்று அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் 4 பேர் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாஷிங்டன் அறிவித்ததை அடுத்து ஏமனில் இந்த வாரத்தில் நடைபெறும் இரண்டாவது தாக்குதல் சம்பவம் இது.

தீவிரவாதிகள் அதிகம் உள்ள ஷப்வாவின் தெற்கு மாகாணத்தில் நேற்று நடந்த இந்த தாக்குதலில் காரில் சென்ற 4 அல்-கொய்தா தீவிரவாதிகள் ஏவுகணை வீசி கொல்லப்பட்டனர்.

இதேபோன்று கடந்த திங்கள் அன்று ஷப்வா மாகாணம் மரிப்பிற்கிடையே உள்ள பாலைவனத்தில் காரில் சென்ற மூன்று அல்கொய்தா தீவிரவாதிகளை அமெரிக்க ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தி அழித்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com