Friday, December 12, 2014

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்குமாறு பிரிட்டன் இலங்கையை கோரியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்குமாறு பிரிட்டன் இலங்கையை கோரியுள்ளது. பிரிட்டனின் பிரபுக்கள் சபையில் நடைபெற்ற விவாதத்தின் போது இதனை தெரிவித்துள்ள வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இணையமைச்சர் லோர்ட் லிவிங்ஸ்டன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம்நடைபெறவுள்ளது,தேர்தல் எவ்வாறாக நடைபெற்றது என மதிப்பிடுவதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளோம்.

இலங்கை தேர்தல் ஆணையகம் பொதுநலவாய மற்றும்,சார்க் கண்காணிப்பாளர்களை அழைத்துள்ளதாக அறிகிறோம்.
அதனை வரவேற்கிறோம்.

பிரிட்டனின் திறந்த பொருளாதார கொள்கை என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்டுள்ளது. இவ்வருடம் இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பிரிட்டன் ஆதரவு வழங்கியது.

இலங்கை அரசாங்கத்தை ஐ.நா விசாரணையாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும், சாட்சியமளிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும், அதன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் தொடர்ந்தும்வலியுறுத்தி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com