Saturday, December 13, 2014

குருமன்காடு விநாயகர் ஆலயத்தின் முன்பு தினமும் காட்ஸ் விளையாடும் இளைஞர்கள்.

வவுனியாவில் குருமன்காடு விநாகர் தேவஸ்தானம் பரசித்தி பெற்ற கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் ஆலயத்தின் முன் ஆட்டோ நிறுத்தும் இடமும் அமைந்துள்ளது. அதற்கு அருகில் பல இளைஞர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின்றன. காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணிவரை ஆட்கள் மாறி மாறி சூதாட்டத்தில் ஈடுபடுவது அறியப்பட்டுள்ளது. சிறுவர்கள் சிலரும் இதில் ஈடுபடுகின்றனர். அத்துடன் திருநாவற்குளம் முதலாம் ஒழுங்கையில் களவாக விற்கப்படும் கஞ்சாஎனும் பொதைப்பொருளை வாங்கி அவ்விடத்தில் உபயோகிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கோயிலுக்கு செல்லும் இளம் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். சுpல இளைஞர்களின் பெயர்கள் எமக்கு தரப்பட்டன. ஆனால் அப் பெயர்களை வெளியிடாமல் செய்தியை மட்டும் பிரசுரிக்கின்றோம்.

பொதுவான ஒரு இடத்தில் இத்;தகைய செயற்பாடு ஒன்று நடைபெறுவதற்கு பொலிஸ் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது??? மக்கள் என்ன செய்யப்போகின்றார்கள்??? கோயில் நிர்வாகம் என்ன செய்யப்போகின்றது???

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com