Saturday, December 13, 2014

தாண்டிக்குளத்தில் நீர் வளங்கள் வடிகால் அமைச்சு நிர்மாணித்த நீர் வளங்கள் குழாய் அமைக்கும் பணியில் ஊழல். மக்கள் குமுறல்.

தற்போது சற்று முன்னர் வவுனியா இராசேந்திரகுளம் ஒமேகா காமென்சில் இருந்து முல்லைத்தீவுக்கு பணியாளர்களை ஏற்றி சென்றுகொண்டிருந்த GP 2819 பஸ் வண்டி தாண்டிக்குளம் மூன்றாம் ஒழுங்கை பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த காமென்ஸ் பணியாளர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். வீதி ஓரத்தில் நீர் வளங்களுக்காக ஏற்படுத்தபட்டிருந்த கிடங்கு ஒழுங்காக மூடப்படாததால் சென்று கொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளாகியது. இது போன்று முன்பும் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகி முறைப்பாடு தெரிவிகபட்ட போதும் அதற்கு எந்த நடவடிக்கையும் மேட்கொள்ளபடவில்லை. இந்த பனியின் போது பல இலட்ச கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் தெரிவிக்க படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com