Sunday, October 5, 2014

பள்ளிவாசல் கட்டிடத்தை அகற்றுமாறு மாத்தறை மாநகர சபை உத்தரவு!

மாத்தறை, இஸ்ஸதீன் நகர் பள்ளிவாசல் கட்டிடத்தை அகற்றுமாறு மாத்தறை மாநகர சபையினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தொடர்பாக 02.10.2014ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்று வக்பு சபையில் பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் கடிதத்தில் பள்ளிவாசலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரிக்கு பள்ளிவாசலின் தலைவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த பள்ளிவாசல் அமைந்துள்ள முகவரியிலுள்ள கட்டிடத்தை 14 நாட்களுக்குள் அகற்றுமாறும் இந்தக் கடிதத்தில் தெரிவித்தக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, இஸ்ஸதீன் நகர் பள்ளிவாசலை மூடுவதற்கு கடும் போக்காளர்கள் கடந்த வருடம் முதல் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையே மாத்தறை மாநகர சபையினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com