Sunday, October 5, 2014

சிறையிலுள்ள ராஜ் ராஜரட்ணம் மீது புலிகளுக்கு நிதி உதவியமைக்காக தாக்லான வழக்கு விசாரணைக்கு வருகின்றது.

அமெரிக்காவில் கோடிஸ்வரனாக இருந்தவர் இலங்கையை சேர்ந்த ராஜ் ராஜரட்ணம். பங்கு சந்தையில் சட்டவிரோதமான முறையில் உள்வியாபாரம் செய்தமை நிரூபிக்கப்பட்தை தொடர்ந்து அமெரிக்க வரலாற்றில் இவ்வாறான குற்றத்திற்கு அதிக தண்டனையான 11 வருடங்கள் சிறைத்தண்டனை ராஜரட்ணத்திற்கு வழங்கப்பட்டது யாவரும் அறிந்தது.

இந்நிலையில் இவர்மீது புலிகளின் பினாமி அமைப்பு என்று அறியப்படுகின்ற தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினருக்கு நிதி வழங்கியமைக்காக வழக்க தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டிருந்த தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினருக்கு 2000ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டுக்குட்பட்ட காலத்தில் ராஜ் ராஜரட்ணமும் அவரது தந்தை ஜேஎம் ராஜரட்ணமும் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 640 கோடி இலங்கை ரூபாக்கள்) வழங்கியுள்ளமை தெளிவாகியுள்ளது.

இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் வரவுள்ளதாகவும் அமெரிக்காவில் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு ஒத்தாசை புரிதல் தேசத்துரோக குற்றமென ராஜரட்ணம் மற்றும் அவரது தங்தையாருக்கு பாரிய தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கு குறப்பிடத்தக்க விடயம் யாதெனில் ராஜரட்ணத்தின் மகள் என அறியப்படும் யுவதி ஒருவர் வன்னியில் புலிகள் அமைப்பிலிருந்துள்ளார். யுத்தத்தின் இறுதி கட்டத்தில் சரணடைந்த இவர் தடுப்பு முகாமொன்றிலிருந்து படையினருக்கு கோடிக்கணக்கான பணத்தினை கொடுத்து வெளியே வந்து தற்போது ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். இவரின் பெயரில் கோடிக்கணக்கான பணம் ராஜரட்ணத்தால் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அப்பணத்தினை சுருட்டுவதற்கு புலிகளின் ஒரு தரப்பினர், சிங்கப்பூரில் பயங்கரவாத நிபுணர் என சொல்லப்படுகின்ற பாதுகாப்பு அமைச்சுக்கு நெருக்கமானவர் ஒருவருடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது. இச்செயற்பாடுகளுக்கு தமிழ் இணையம் ஒன்றினை முன்னர் நாடாத்தி வந்தவனும் தற்போது ஈபிடிபி யின் மண்கொள்ளை முகவருமாக மாறியுள்ள கண்ணன் என்பவன் இருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com