Sunday, October 5, 2014

களவாக காணி விற்ற பொதுபலசேனாவின் தேரர் கைது. 7.5 மில்லியன் பிறாடு.

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் இனங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான வலது கரமும் அக்கட்சியின் உப நிதிச் செயலாளருமான வெல்லம்பிட்டய சுமணதாச என்ற தேரர் காணி ஒன்றினை களவாக விற்றதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த சங்கத்தின் பிக்குகள் சார்பில் பொரலஸ்கமுவ பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றுக்காக விகாரரையின் பிக்குகளில் பெயரில் எழுதப்பட்டிருந்த காணியினை தனது சொந்த சொத்தாக விற்று எழுபத்திஐந்து லட்சங்களை பெற்றுக்கொண்டுள்ளார் குறித்த பிக்கு.

காணி உரிமை மாற்றத்தில் ஏற்பட்ட சிக்கலில் பிக்குவின் திருட்டினை உணர்ந்த காணியை கொள்வனவு செய்த வர்த்தகர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கொடுத்த புகாரை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது.

எது எவ்வாறாயினும் குறித்த பிக்கு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டபோது இரண்டு லட்சம் ருபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

குறித்த தேரரே கடந்த காலங்களில் சில அமைச்சகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து வட்டரக்க தேரரை தேடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது வீடியோ





கைது செய்யப்பட்ட பிக்கு அமைச்கத்தினுள் புகுந்து அட்டகாசம் புரிந்தபோது வீடியோ


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com