Monday, September 22, 2014

முன்னாள் காதலனால் கடத்தப்பட்ட பெண் மகனுடன் காரிலிருந்து கீழே குதித்துத் தப்பினார்!

குருணாகல் பொல்பித்திகம பொலிஸ் பிரிவில் கார் ஒன்றில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் இளம் தாயொரு வரையும் அவரது மூன்றரை வயது மகனையும் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்ப வத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் இருவரை பொல்பித் திகம பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசமொன்றில் நேற்று பகல் காரில் வந்த சிலர் தாயொருவரையும் அவரது மூன்றரை வயது மகனையும் கடத்திச் சென்றுள்ளனர். காரில் நான்கு சந்தேக நபர்கள் இருந்துள்ளதை பிரதேச மக்கள் அவதானித்துள்ளதுடன் அந்தக் காரை பிரதேச மக்கள் பின் தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர்.

வெல்லவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இந்தகஸ்பிட்டிய என்ற இடத்தில் காரின் வேகம் குறைந்த நேரத்தில் தாயும் மகனும் அதிலிருந்து வெளியே குதித்து கடத்தல் காரர்களிடமிருந்து தப்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் கடத்தல்காரர்கள் காரில் தப்பித்துச் சென்றுள்ளதுடன் தாயாரும் மகனும் பொல்பித்திகம அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப ட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொல்பித்திகம பொலிஸார் முறைப்பாட்டினை பெற்றுக் கொண்டதை அடுத்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரின் இலக்க தகடு போலியானதாக இருக்கலாம் என்ற ஊகத்தில் பொலிஸார் காரின் பயணப் பாதையை மையப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து குருணாகலை அண்மித்த ஒரு பகுதியில் வைத்து காருடன் சந்தேக நபர்களில் இருவரை பொலிஸார் நேற்று கைது செய்தனர். குறித்த சந்தேக நப்ர்களிடம் மேற்கொன்ட விசாரணைகளில் தனிப்பட்ட விடயத்துக்காக இந்த கடத்தல் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட தாய்க்கு முன்னர் ஒரு காதல் தொடர்பு இருந்துள்ளதுடன் இடையில் அந்த காதல் தொடர்பு தடைப்பட்டுள்ளது இந்நிலையில் பழைய காதலன் அவரை மீன்டும் தன்னுடன் வருமாறு வற்புறுத்தியுள்ளார். எனினும் அவரது அழைப்பை அந்த பெண் தொடர்ந்து மறுத்துவந்துள்ள நிலையிலேயே கதலனான சந்தேக நபர் இந்தப் பெண்ணையும் அவரது மகனையும் கடத்த முயற்சித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com