Monday, September 22, 2014

பழம் வீதியில் திருட்டுத்தம்பதியினர் பொலிஸாரால் கைது !!

திருடிய பொருட்களினை பதுக்கி வைத்திருந்த நபரின் மனைவியினை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆறுகால் மடம் பழம் வீதியிலேயே நேற்று முன்தினம் மாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த இடத்தில் வீடொ ன்றினை வாடகைக்கு எடுத்த மனைவியும் கணவனும் திருட்டுப் பொருட்களினை அவ் வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். இத்திருட்டு கணவன் பொலிஸாரிடம் பிடிபட்டுக் கொண்டத னையடுத்து கணவனால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தன்னால் திருடப்பட்ட பொருட்களை குறித்த இடத்திலுள்ள வீடொன்றில் பதுக்கி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் குறித்த திருடனின் வீட்டினை முற்றுகையிட்ட மானிப்பாய் பொலிஸார் திருடி மறைக்கப்பட்டிருந்த பொருட்களினை மீட்டதோடு திருடனின் மனைவியினையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். குறித்த வீட்டிலிருந்த வீட்டுத் தளபாட பொருட்கள் இலத்திரனியல் சாதனங்கள் எனப் பல பெறுமதி மிக்க பொருட்களையும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை தங்களுடைய வீட்டினை வாடகைக்கு கொடுக்கும் போது வாடகைக்கு வீட்டினை எடுப்பவர்கள் எவ்வாறானவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து வாடகைக்கு வழங்க வேண்டுமென வீட்டு உரிமையாளர்களிற்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை குறித்த கைதுச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில நாட்களிற்கு முன்னர் அப்பகுதி வீடொன்றில் இடம்பெறவிருந்த திருட்டு முயற்சியொன்றும் அப்பகுதி இளைஞர்களினால் முறியடிக்கப்பட்டமை குறிப்பிட த்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com