Thursday, August 21, 2014

புத்தர் சிலைகள் நான்குடன் சந்தேக நபர்கள் இருவர் கைது!

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து கொள்ளையிடப்பட்ட விலை மதிக்க முடியாத புத்தர் சிலைகள் நான்கையும் ஒரு தூபியையும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.

தலதா மாளிகையில் சேவை செய்த ஒருவரும் அந்த சிலைகளை வாங்கிய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான இவ்விருவரையும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

(க.கிஷாந்தன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com