Sunday, August 17, 2014

புலமைப் பரிசில் பரீட்சை எழுதுவதற்காக ஏற்றிச் சென்ற பஸ் விபத்தில்...! மாணவர்களுக்கு உடன் சிகிச்சை!! (படங்கள் இணைப்பு)

தம்புள்ளை இனாமலுவ பிரதேசத்தில் இன்று நடந்த விபத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினரின் டிரக் ஒன்றுடன் குறித்த பஸ் மோதியதில் 18 பேர் காயமடைந்துள்ளனர். அதில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் சிலரும் 5 இராணுவ வீரர்களும் உள்ளடங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு பரீட்சை மண்டபத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com