Sunday, August 31, 2014

பொலிஸ் தினத்தினை முன்னிட்டு பொகவந்தலாவவில் நடமாடும் சேவை! (படங்கள் இணைப்பு)

148வது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொகவந்தலாவ பிரதேச மக்களுக்கான இலவச நடமாடும் சேவை நேற்று (30)சனிக்கிழமை காலை 09 மணியளவில் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சரத்சமர விக்ரம தலைமையில் பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.

இந்த நடமாடும் சேவையில் இரத்தானம் வழங்குதல், அடையாள அட்டை, பிறப்புச்சான்றுதல், பொலிஸ் அறிக்கை, முறைப்பாடு ஏற்றுகொள்ளல் என்பன இடம் பெற்றது.

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் களுத்துரை பொலிஸ் வித்தியாலயத்தின் விரிவுரையாளரும் பிரதான பொலிஸ் பரீசோதகருமான புத்திக்க பாலசுந்தர தலைமையில் இடம் பெற்றது.

(க.கிஷாந்தன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com