Sunday, August 31, 2014

கொட்டகலயில் சுற்றாடல் ஈரநிலப் பூங்கா!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் பேரில் அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தியமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் செயற்பாட்டுடன் நகரஅபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த கொட்டகலை சுற்றாடல் ஈர நிலபடபூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டம் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தியமைச்சர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் நேற்று (30)ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுக்கோளுக்கிணங்க 25 ஏக்கர் கொண்ட இந்த கொட்டகலை ஈரநில நிலப்பரப்பில் நகரஅபிவிருத்தியமைச்சின் 340 இலட்சம் நிதிஒதுக்கீட்டில் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதில் நீர்தேக்ககுளம்,உணவகம், இயற்கையைரசித்தல்,உணவுகடைகள்,வாகனநிறுத்துமிடவசதிகள்,சுகாதாரவசதிகள் எனபலதிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இது வெளிநாட்டுமற்றும் உள்நாட்டுசுற்றுலாபயணிகளுக்காகவும் மக்களுக்காகவும் இத்திட்டத்தைதான் மேற்கொள்ளதீர்மானித்ததாகஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இந்நிகழ்வின் போதுதெரிவித்தார்.

இந்கிழ்வுக்குநகரஅபிவிருத்திஅதிகாரசபையின்தலைவர் நாமல் பெரேரா,பொருளாதாரஅபிவிருத்திபிரதிஅமைச்சர் முத்துசிவலிங்கம், இலங்கைதொழிலாளர் காங்கிரஸின் பலமுக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

(க.கிஷாந்தன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com