Wednesday, August 6, 2014

வீட்டுக்குள் புகுந்து மாணவி பாலியல் பலாத்காரம்! - இலங்கை இளைஞன் இந்தியாவில் கைது!

தமிழகத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத் தூரைச் சேர்ந்த மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத் திற்கு உட்படுத்திய இலங்கை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது

நேற்று காலை 10:00 மணிக்கு மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது கீழ்பட்டு கிராமம் இலங்கை தமிழர் அகதி முகாமில் வசிக்கும் தினகர் 20, என்பவர் வீட்டுக்குள் புகுந்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினார். மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, தினகரை கைது செய்தனர்.

9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியே பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com