Wednesday, July 9, 2014

நகரசபை தலைவரின் வீட்டிற்கு ஆசிரியையை வற்புறுத்தி அனுப்பிய அதிபர்! விசாரணை ஆரம்பம்!

குருணாகல் நகரசபை தலைவரின் வீட்டிற்கு ஆசிரியையை வற்புறுத்தி அனுப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குருணாகல் மலியதேவ மகா வித்தியாலயத்தின் அதிபரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, கல்விச் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியல்வாதி ஒருவரின் வீட்டிற்கு ஆசிரியயை அனுப்பிய சம்பம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கல்வி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

குருணாகல் நகர சபை தலைவரின் பிள்ளைக்கு புத்திமதி கூறிய ஆசிரியை ஒருவரை, மன்னிப்பு கேட்பதற்காகவே குருணாகல் நகரசபை தலைவரின் வீட்டிற்கு ஆசிரியையை வற்புறுத்தி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com