Monday, July 28, 2014

ஹிருணிக்கா சொன்னால் போதைப்பொருள் விற்பனையாளர்களை உடன் பிடிப்போம்!

போதைப் பொருள் விற்பனையாளர்கள் பற்றி மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர பொலிஸிற்கு தகவல் வழங்குவாராயின் அதுதொடர்பில் பொலிஸ் செயற்படுவதற்கு ஆயத்தமாகவிருப்பதாக பொலிஸ் குறிப்பிடுகிறது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிடும்போது, கொழும்பில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் பற்றி மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் அவர் போதைப் பொருள் வியாபாரம் செய்பவர்களின் பெயர்களைப் பொலிஸாருக்கு வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் பெற்றுத் தருவோர் விடயத்தில் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com