திகம்பரம் ஆளும்கட்சியை விட்டு எதிர்க்கட்சியில் இணைந்தாரா?
பாராளுமன்ற உறுப்பினர் பீ. திகம்பரம் ஆளும் கட்சியை விட்டு எதிர்க்கட்சியில் இணைவதற்குத் தீர்மானித்துள்ளதாக நம்பகத்தன்மை மிகுந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை சென்ற வாரம் நடைபெற்றிருப்பதோடு, இதுவரை எதிர்க்கட்சியிலிருந்து இதுதொடர்பில் அவருக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கம் தனக்கு பிரதி அமைச்சர் பதவி தருவதாகக் குறிப்பிட்டபோதும், இதுவரை தனக்கு அதுதொடர்பில் சாதகமாக எதுவும் அமையவில்லை என்பதனாலேயே பா.உ. இத்தீர்மானத்திற்குக்கு வர ஏதுவாகியுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment