Saturday, June 7, 2014

விடைபெறுகின்றார் நவநீதம் பிள்ளை! புதிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக ஜோர்தான் இளவரசர்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் புதிய ஆணையாளர் பதவிக்கு ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைனை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் முன்மொழிந்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, அல் ஹூசைன் புதிய ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஐ.நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் புதிய ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜோர்தான் நாட்டுக்கான ஐ.நா.வின் நிரந்தர தூதராக செயற்படும் அல் ஹூசைன் (50), கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com