Saturday, June 7, 2014

துரையப்பா நவரத்தினராஜாவின் வெற்றிடத்திற்கு இனியபாரதி!

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியின் சார்பில் போட்டியிட்ட இனியபாரதி என்றழைக் கப்படும் புஷ்பகுமார் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது..

கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார். அவரது வெற்றிடத்திற்கே இனியபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வின் போது இவர், உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com