Tuesday, June 10, 2014

வானிலை அவதான நிலையத்தில் சரியாக எதிர்வு கூறக்கூடிய அதிகாரிகள் குறைவு…

நாளின் காலநிலை எதிர்வுகூறுவதற்கு 24 மணித்தியாலமும் ஒரே ஒரு வானிலை ஆராய்ச்சியாளர் மட்டுமே இருக்கின்றார் எனவும், வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு வானிலை ஆராய்ச்சியாளர்கள் 22 பேருடைய தேவை இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கின்றது.

பணியாளர் சபைக்கு வானிலை ஆய்வாளர்கள் 35 பேர் இருக்க வேண்டும் என்றும், தற்போது 13 பேர் மட்டுமே இருப்பதாகவும், வானிலை ஆய்வாளர் வெற்றிடத்திற்கு பட்டதாரிகள் 9 பேர் தற்போது நியமிக்கப்பட்டபோதும் அவர்களுக்கு பயிற்சி வழங்கி அவர்களை சேவையில் இணைத்துக் கொள்ள இன்னும் இரண்டு ஆண்டுகள் செல்லும் என்றும் திணைக்களம் அறிவிக்கிறது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் இதுதொடர்பில் வினவியபோது, திணைக்களத்திற்கு இணைத்துக் கொள்ளப்படுகின்ற சில அதிகாரிகள் கூடுதலான சம்பளத்திற்காக வேறு நிறுவனங்களுக்குப் போய்விடுகின்ற நிலைமை இருப்பதாகத் தெரிவித்தார்.

வானிலை ஆய்வாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓய்வுபெற்ற வானிலை ஆய்வாளர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தபோதும் ஒருவர் மட்டுமே வருகை தந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com