Friday, June 13, 2014

எல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டுமே பொதுமக்களின் துயர் களையலாம்! - புபுது ஜயகொட

பொது அபேட்சகரினால் அல்லது அரசாங்கத்தினுள்ளே ஏற்படுகின்ற உட்பூசல்களினால் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவியலாது எனவும், எல்லோரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதன் மூலமாகவே வெற்றி காணலாம் எனவும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜயகொட புபுது ஜயகொட குறிப்பிடுகின்றார்.

“அரசாங்கத்தினுள்ளே மகிந்த - வீரவங்ச, மகிந்த - சம்பிக்க, ஹக்கீம் - தி.மு. போல எதிர்ப்புக்கள் மேலோங்கி வெடித்துச் சிதறும் என சிலர் எதிர்பார்த்திருக்கின்றார்கள். இன்னும் சிலர் எதிர்க்கட்சியின் நிலை என்னாகும் என எதிர்பார்த்திருக்கின்றார்கள். பொது அபேட்சகர்தான் சகல உரிமைகளையும் கொண்ட துன்பத்தில் துயருருவோரை மீட்டெடுப்பவர் என மற்றும் சிலர் நினைக்கிறார்கள். அவர் வந்த்தன் பின்னர் எங்கள் பிரச்சினைகள் எல்லாம் இல்லாது ஒழியும் என மக்களில் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும், அண்மைய பார்வைகள் இவர்கள் இரு சாராருக்கும் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாது என்பதை துள்ளியமாகக் காண்பிக்கின்றது” எனவும் ஜயகொட தெரிவித்திருக்கின்றார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com