அடுத்துவரும் தேர்தலில் மர்வின் போட்டியிட மாட்டார்....?
அடுத்துவரும் தேர்தலுக்கு முன்னர் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளக்கூடிய முறையில் சேவை செய்யக்கூடிய வாய்ப்பு தனக்கு கிடைக்காதிருப்பின், வேட்பாளராக நிற்க மாட்டேன் என அமைச்சர் மர்வின் சில்வா குறிப்பிடுகிறார்.
கம்பஹாவில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போதே அவர் அவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
“என்னைப் பழிக்கின்ற, பொய்க் குற்றங்கள் சுமத்துகின்றவர்களுக்கு என்றேனும் ஒருநாள் உண்மை தெளிவாக வேண்டும் என நான் பிரார்த்தித்து வருகின்றேன். என்றாலும் வளைந்து கொடுக்க மாட்டேன்.. பணிந்து செல்ல மாட்டேன்.. என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போல், இழிவுகள் போல் அரசியலில் வேறு யாருக்கும் ஏற்பட்டிருக்காது என நான் நினைக்கிறேன்.
பேய்களுக்கு கொடுக்க வேண்டியவை எவை என்பது பற்றி எனக்கு நன்கு தெரியும். நான் எந்தவொரு விலங்குக்கும் தானம் கொடுத்த அரசியல் செய்வதில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment